பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிலருக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (மார்ச் 13) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது கொழும்பு, தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தைச் சுற்றியுள்ள வீதிகளை மறித்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று காலை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, வீரகுமார திஸாநாயக்க, பியசிறி திஸாநாயக்க, மொஹமட் முஸம்மில், ஜயந்த சமரவீர உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியமைக்காக விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் சுமார் 10 மில்லி
கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாடுகளி
இலங்கையில் காதலுக்காக சண்டை போடும் யானைகள்.
அம்பா
அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பி
யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத
வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
இலங்கை மின்சார துறையின் தொழிற்நுட்ப பிரிவுகளில் பல ஆண 2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் ஒரு மன்னன் அவதரிப்பார் எ இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வாரத்திற்கு ஒரு மு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்க கெஸ்பேவ நகர சபையின் தவிசாளர் உட்பட 33 உறுப்பினர்கள் சுய நாட்டில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மலைய சமூக ஆர்வலர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவ
