யாழ்ப்பாணம் - தென்மராட்சி - மட்டுவில் தெற்கை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தாய் ஆட்டிறைச்சியின் எலும்பு சிக்கியதால் உயிரிழந்தார்.
இந்தப் பெண், கடந்த 25ஆம் திகதி ஆட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். ஆட்டிறைச்சியின் எலும்பு துண்டொன்று தொண்டைக்குள் சிக்கியுள்ளது. இதனால் அவர் வாழைப்பழம் சாப்பிட்டுள்ளார். எலும்பு மார்பு பகுதிவரை இறங்கி சிக்கிவிட்டது.
மறுநாள், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் சென்றுள்ளார். அவருக்கு வாய் வழியாக கமெராவை செலுத்தி ஆராய மருத்துவர்கள் முற்பட்டுள்ளனர். ஆனால், இதற்கு உடன்பட அந்த பெண் மறுத்து வீட்டுக்கு சென்றுள்ளார் என்று தெரிய வருகிறது.
இந்த நிலையில், திங்கட்கிழமை அந்தப் பெண் இரத்த வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இறப்பின் பின்னர், கமெரா மூலம் பார்த்தபொழுது ஆட்டிறைச்சி எலும்பு குருதிக் குழாயில் குத்தியதாலேயே இரத்த வாந்தி எடுத்தார் என்று மருத்துவர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் பல தடவைகள் கூட்டமைப்பை பேச்சுக்கு அழை
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று இரண
திருகோணமலை - மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற
பொதுமக்களின் பிரச்சினைக்கு இந்த அரசிடம் தீர்வு ஏதுமி
சர்வதேச நீர் தினமான இன்று சுற்றாடல் பாதுகாப்பின் முக்
குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எ
பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடிய
நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் ரூபாய்க்கு மே
அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதர
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே 3வது அலையில
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டம் இரா
பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித ம
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோறளைப்பற்று பிர
