ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நீக்கப்பட்டதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் உரையாற்றிய ஜயசுமண,
கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்டமைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமே நீக்கப்பட வேண்டியவர். பீரிஸ் அல்ல என குறிப்பிட்டார்.
மார்ச் 04 அன்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியில் இருந்து பேராசிரியர் பீரிஸை நீக்குவதற்கான கட்சியின் நிறைவேற்று சபை ஏகமனதாக தீர்மானித்ததாக காரியவசம் அறிவித்தார், மேலும் வெற்றிடமான பதவியை யார் நிரப்புவது என்பதை தீர்மானிக்க சபை இந்த வாரம் கூடவுள்ளது.
எனினும், கட்சியின் நிறைவேற்று சபையினால் இவ்வாறான தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவே இந்த தீர்மானங்களை எடுக்க முடியும் எனவும் விளக்கமளித்துள்ளார்.
மேலும், பேராசிரியர் பீரிஸின் நியாயமற்ற பதவி நீக்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளதாகக் கூறினார்.
சாகர காரியவசத்திற்கு கட்சியின் கொள்கைகள் தெரியாது. இறுதியில் கட்சி மற்றும் செயலாளர் பதவி இரண்டையும் பேராசிரியர் பீரிஸிடம் கொடுத்துவிட்டு சாகர காரியவசம் வீட்டுக்குச் செல்ல வேண்டும்” என்று பேராசிரியர் ஜெயசுமண கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழீழ வி
கொழும்பு துறைமுக நகரத்தில் திறப்பு விழா!
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 750 மில்ல
தனியார் பஸ் ஊழியர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்தத்
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த ம
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ர
முன்னொருபோதுமில்லாத அளவுக்கு நாடு பெரும் பொருளாதார ந
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள
ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்
அரசாங்கம் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு முரணாக சிங்கர
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலயில் ஏற்றுமதிக்கு பதப்படுத்
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்தில் இருந்த
நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சா
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர