ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நீக்கப்பட்டதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் உரையாற்றிய ஜயசுமண,
கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்டமைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமே நீக்கப்பட வேண்டியவர். பீரிஸ் அல்ல என குறிப்பிட்டார்.
மார்ச் 04 அன்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியில் இருந்து பேராசிரியர் பீரிஸை நீக்குவதற்கான கட்சியின் நிறைவேற்று சபை ஏகமனதாக தீர்மானித்ததாக காரியவசம் அறிவித்தார், மேலும் வெற்றிடமான பதவியை யார் நிரப்புவது என்பதை தீர்மானிக்க சபை இந்த வாரம் கூடவுள்ளது.
எனினும், கட்சியின் நிறைவேற்று சபையினால் இவ்வாறான தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவே இந்த தீர்மானங்களை எடுக்க முடியும் எனவும் விளக்கமளித்துள்ளார்.
மேலும், பேராசிரியர் பீரிஸின் நியாயமற்ற பதவி நீக்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளதாகக் கூறினார்.
சாகர காரியவசத்திற்கு கட்சியின் கொள்கைகள் தெரியாது. இறுதியில் கட்சி மற்றும் செயலாளர் பதவி இரண்டையும் பேராசிரியர் பீரிஸிடம் கொடுத்துவிட்டு சாகர காரியவசம் வீட்டுக்குச் செல்ல வேண்டும்” என்று பேராசிரியர் ஜெயசுமண கூறினார்.
மன்னார் சதோச மனித புதைகுழி மற்றும் திருக்கேதீஸ்வர மனி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது தொடர் கடந
யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாள
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவ
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோவ
பதுளை - ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர
இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக ஊடக ஆர்வல
தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்
எதிர்வரும் மே மாதம் 15ம் திகதி நடத்தப்படவிருந்த 2022ம் ஆண
சர்வதேச தகவல் உரிமை தினத்தினை முன்னிட்டு வெகுசன ஊடக அ
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல
தமிழக மீனவர்களின் அட்டூழியங்களை கண்டித்து யாழில் மீன
தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு
உலகில் பெண்களின் உரிமைகளுக்காக ஒரு தினம் கொண்டாடப் பட
