கொழும்பின் சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
உயர்பாதுகாப்பு வலயங்கள் வர்த்தகங்களுக்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்துவதாக சில பொருளாதார நிபுணர்கள் தெரிவித்ததையடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான தனது விஜயங்களை முடித்துக் கொண்டு ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புலனாய்வுப் பிரிவுகளின் உதவியுடன் புதிய மாற்றுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு நிபுணர்கள் சிலரின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் சில பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள
இலங்கையில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் காணா
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்
காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கும் என எமத
ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்த
யாழில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியி
கடந்த சில தினங்களில் கோவிட் தடுப்பு செயலூக்கியினை பெற
தமிழ் தேசிய கூட்டமைப்பானது இந்த நாட்டுக்கோ, பௌத்த மதத
அம்பாறை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து காவல்த்த
க
நாட்டில் சுமார் 1000 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்ப
வடமாகாண மக்களுக்கு வழங்கப்பட்ட 50,000 சினோபோம் கோவிட் -19 த
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், அவரின் பாரி
திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முத
அரசாங்க உத்தியோகத்தர்கள் பொருத்தமான ஆடைகளை அணிவது தொ
