தேசிய பேரவை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முதல் தடவையாக கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் என சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சபைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அண்மையில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
சபாநாயகர் தேசிய சபையின் தலைவராக செயற்படுவார் என்றும் பிரதமர், அவைத்தலைவர், எதிர்க்கட்சி தலைவர்,அரசாங்கக்கட்சியின் பிரதம அமைப்பாளர் ஆகியோருடன் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தேசியசபையில் செயற்படுவார்கள் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இதன்படி, டக்ளஸ் தேவானந்தா, நஸீர் அஹமட், சிசிர ஜெயகொடி டிரான் அலஸ், சிவநேசத்துரை சந்திரகாந்தன், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பவித்ரா வன்னியாராச்சி, வஜிர அபேவர்த்தன, ஏ.எல்.எம் அத்தாவுல்லாஹ், திஸ்ஸ விதாரன, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், விமல் வீரவன்சஎ உதய கம்மன்பில, பழனி திகாம்பரம், மனோ கணேசன், ரோஹித்த அபேகுணவர்த்தன, நாமல் ராஜபக்ஷ, அலி சப்ரி ரஹீம், ஜீவன் தொண்டமான், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அத்துரலியே ரத்தன தேரர், அசங்க நவரட்ன, சி.வி விக்னேஸ்வரன் மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் இந்த சபையில் செயற்படுவார்கள் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் டலஸ் அழகப்பெரும அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இ
வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் 6 பேர் உட்
நுவரெலியா – தலவாக்கலை வீதியில் லிந்துலை பிரதேசத்தில
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவு, மக்க
இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே க
நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய அவர்களது இல்லம் அமைந்துள்
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாயால் குற
நாட்டின் தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் இசைப்பதன் மூல
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர
அடுத்த சிறுபோக பயிர் செய்கையின் போது விவசாயிகளுக்கு உ
சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்
கடந்த 24 மணித்தியாலங்களில் 18 விமானங்களில் நடவடிக்கைகளி
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் ந