ஈரான் ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை கொடுத்து உதவியதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரானியத் தூதரின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் என்றும் ஈரானிய தூதரகப் பணியாளர்கள் கீவில் உள்ள ஈரானிய தூதரகப் பணியாளர்கள் குறைக்கப்படுவார்கள் என்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுவரை நடந்த மோதலில் மொத்தம் எட்டு ஈரானிய ஆளில்லா விமானங்களை உக்ரைனியப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக நேற்று இரவு நேர காளொணி உரையில் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
மேலும் 'ஆறு ஈரானிய ஆளில்லா விமானங்கள் கிழக்கு மற்றும் தெற்கு கட்டளைகளின் எங்கள் வான் பாதுகாப்புகளால் வீழ்த்தப்பட்டன. கடற்படையின் வான் பாதுகாப்பு மூலம் மேலும் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. மற்றொரு தாக்குதல் ஈரானிய ஆளில்லா விமானத்தின் தெற்கு கட்டளையின் வான் பாதுகாப்புப் படைகளால் வீழ்த்தப்பட்டது.
இத்தகைய நட்பற்ற செயலுக்கு பதிலளிக்கும் விதமாக, ஈரானின் தூதரின் அங்கீகாரத்தை பறிக்க உக்ரைன் தரப்பு முடிவு செய்துள்ளது மேலும் தலைநகர் கிவ்வில் உள்ள ஈரானிய தூதரகத்தின் தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது' என கூறினார்.
ரஷ்யாவிற்கு ஆளில்லா விமானங்களை வழங்கியதாக உக்ரைன் மற்றும் அமெரிக்கா கூறும் கூற்றை ஈரான் மறுத்துள்ளது.
போரில் இரு தரப்பிற்கும் ஈரான் உதவாது என்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்மானம் எட்டப்பட வேண்டும் எனவும் ஈரானில் உள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நைஜீரியா நாட்டின் வடமேற்கில் உள்ள கெப்பி மாநிலத்தில்
யுக்ரெய்னை ஆக்கிரமிப்பதற்கு ரஸ்யா தயாராகி வருகின்ற ந
கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிர
இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் ம
பிரித்தானியாவில் இடம்பெறக்கூடிய உள்ளூராட்சி தேர்தல்
பிரேசிலின் தெற்குப் பகுதியில் உள்ள சாண்டா கேடரினா மாக
போர்ட் ஆப் பிரின்ஸ்: ஹைதியில் நேற்று முன்தினம் ஏற்பட்
அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நாக்ஸ்வில்லே நகரில் உ
அமெரிக்காவின் 71ஆவது வெளிவிவகார அமைச்சராக ஆன்டனி பிளி
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்த
உக்ரைனை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய ரஷ்யாவின்
ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில், தாலிபான்களு
ஆப்கானிஸ்தானில் வன்முறையால் தலிபான்கள் அதிகாரத்தைக்
ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கு
ரஷ்யா உலகின் மிக பயங்கரமான "எக்ஸோஸ்கெலட்டன்"(exoskeleton) உ
