ஈரான் ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை கொடுத்து உதவியதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரானியத் தூதரின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் என்றும் ஈரானிய தூதரகப் பணியாளர்கள் கீவில் உள்ள ஈரானிய தூதரகப் பணியாளர்கள் குறைக்கப்படுவார்கள் என்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுவரை நடந்த மோதலில் மொத்தம் எட்டு ஈரானிய ஆளில்லா விமானங்களை உக்ரைனியப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக நேற்று இரவு நேர காளொணி உரையில் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
மேலும் 'ஆறு ஈரானிய ஆளில்லா விமானங்கள் கிழக்கு மற்றும் தெற்கு கட்டளைகளின் எங்கள் வான் பாதுகாப்புகளால் வீழ்த்தப்பட்டன. கடற்படையின் வான் பாதுகாப்பு மூலம் மேலும் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. மற்றொரு தாக்குதல் ஈரானிய ஆளில்லா விமானத்தின் தெற்கு கட்டளையின் வான் பாதுகாப்புப் படைகளால் வீழ்த்தப்பட்டது.
இத்தகைய நட்பற்ற செயலுக்கு பதிலளிக்கும் விதமாக, ஈரானின் தூதரின் அங்கீகாரத்தை பறிக்க உக்ரைன் தரப்பு முடிவு செய்துள்ளது மேலும் தலைநகர் கிவ்வில் உள்ள ஈரானிய தூதரகத்தின் தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது' என கூறினார்.
ரஷ்யாவிற்கு ஆளில்லா விமானங்களை வழங்கியதாக உக்ரைன் மற்றும் அமெரிக்கா கூறும் கூற்றை ஈரான் மறுத்துள்ளது.
போரில் இரு தரப்பிற்கும் ஈரான் உதவாது என்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்மானம் எட்டப்பட வேண்டும் எனவும் ஈரானில் உள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம், சுகாதார கட்டமை
ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சீக்கிய பெற்றோருக்குப
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பத
ஈரான் ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை கொடுத்து உதவியத
உக்ரைனுக்கு எதிரான தாக்குதலுக்கு ஆதரவாக அர்மேனியாவி
ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் ஏப்ரல் 5
மறைந்த தான்சானியா அதிபர் ஜான் மகுஃபுலிக்கு இறுதி அஞ்ச
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதா
அமெரிக்காவின் வாஷிங்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள க
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்ற
ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில், தாலிபான்களு
பெகாசஸ் மூலம் தலைவர்களின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்ட
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக
கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் நடந்த வான்வழிப் போரின் ப
