வளர்ந்து வரும் நாடுகளின் விருப்பங்கள், தொலைநோக்கு ஆகியவற்றை ஐக்கிய நாடுகள் பிரதிபலிக்க வேண்டும் என்றும் ஐ.நா. சபையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம் என்றும் இந்தியா உள்ளிட்ட 34 நாடுகள் ஐ.நா.சபையை வலியுறுத்தியுள்ளன.
இந்தியா, பிரேசில், வங்கதேசம் மற்றும் தென்அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் அளித்துள்ள கடிதத்தில், சமகாலத்திற்கு ஏற்ற வகையில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான முக்கிய அங்கமாகத் திகழும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளன.
வளர்ந்து வரும் சவால்கள், வறுமை, காலநிலை மாற்றம், தொற்றுநோய்கள், உலகளாவிய உணவுப் பாதுகாப்பு, சர்வதேச பயங்கரவாதம் ஆகியவற்றுக்கான தீர்வுகளை வழங்க விரிவான சீர்திருத்தம் அவசரமானது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு சபையில் முன்னேற்றம் இல்லாதது உலகளாவிய பாதுகாப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்கள், கொள்கைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த நாடுகள் குறிப்பிட்டுள்ளன.
நிரந்தரம் மற்றும் நிரந்தரமற்ற வகைகளில் பணியாற்ற சிறு தீவுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் ஆப்பிரிக்காவிற்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பு சபையின் விரிவான சீர்திருத்தத்திற்கு ஐக்கிய நாடுகள் கைகோர்க்க வேண்டும் எனவும் 34 நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லிய
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் சிஜடி என
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ
பிலிப்ஸ் நிறுவனம், உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில்
ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக ஏக
செம்பருத்தி சீரியல் மூலம் தமிழக மக்கள் மனதில் கதாநாயக
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அப்பா விஜயக்குமா
நாட்டில் மட்டுமன்றி நாடாளுமன்றத்தில்கூட கருத்துக்கள
ராகம வைத்திய பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தாக்க
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்
நாட்டின் சனத்தொகையில் 63 இலட்சம் பேர் உணவு பற்றாக்குறை
புனர்வாழ்வு பணியகத்தை அமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட ச
ஊவா மாகாணம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அம்பாந் தோட
ரஷ்யா - உக்ரைனுக்கு இடையிலான போர் இரண்டு வாரங்களாக நீட
யாழ்ப்பாணம் இருபாலையில் உள்ள வீடொன்றில் தமிழீழ விடுத
