More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக வடக்கு-தெற்கில் உள்ள மக்கள் ஒன்றிணைவது பாரிய வெற்றி: சுமந்திரன்!
யங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக வடக்கு-தெற்கில் உள்ள மக்கள் ஒன்றிணைவது பாரிய வெற்றி: சுமந்திரன்!
Sep 23
யங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக வடக்கு-தெற்கில் உள்ள மக்கள் ஒன்றிணைவது பாரிய வெற்றி: சுமந்திரன்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷக்களின் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான தனது சகல முயற்சிகளிலும் தோல்வியடைந்து வருவதாகவும் இறுதியாக வடக்கில் உள்ள மக்கள் தெற்கில் உள்ள தமது சகோதரர்களுடன் கொடூரமான சட்டத்தை நீக்குவதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



காலிமுகத்திடலில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக கையொப்பமிடும் நிகழ்வில் கலந்துகொண்ட அவர், இது ஊழல் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் பெற்ற மகத்தான வெற்றி என தெரிவித்துள்ளார்.



கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 1979 இல் ஒரு தற்காலிக விதிகள் சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் ஆனால் அது நான்கு தசாப்தங்களாக தொடர்ந்து நீடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



அரசாங்கத்தை விமர்சிப்பவர்களின் வாயை அடைக்க எப்போதும் பயன்படுத்தப்படும் இந்த மனிதாபிமானமற்ற சட்டத்திற்கு எதிராக மக்கள் திரள வேண்டிய நேரம் இது  என்றும் அவர் கூறியுள்ளார்.



இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இளைஞர் முன்னணியுடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் காங்கேசன்துறையில் ஆரம்பிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கும் பிரசாரம்இ நேற்று கொழும்பை வந்தடைந்ததுடன் காலிமுகத்திடலில் பொதுமக்கள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன.



மேலும் தெற்கே ஹம்பாந்தோட்டை வரை செல்ல திட்டமிடப்பட்டுள்ள இந்த பிரசாரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கையொப்பங்கள் சேகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் இதுவரை சுமார் 500000 பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.



எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் பலரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May24

அம்பாறை - கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை

Jun12

  நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் டன

May23

மியன்மார் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற ஆங் சான்

Apr30

குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிற

Jul15

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மற்றும் அதன

Sep09

இலங்கையில் மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான கொரோனாத்

Jul14

வவுனியா பல்கலைக்கழகமானது அடுத்து வரும் மூன்று வருட கா

Mar04

இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே க

Feb09

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக

Feb18

ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகி

Mar05

  நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி மற்

Sep12

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூட

Sep12

நாட்டில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்த

Apr05

புராதன பௌத்த தொல்பொருள் சின்னங்களை சிதைத்து, சட்டத்தி

Apr02

ஜனாதிபதி கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ச தனது தந்தையை

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (20:13 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (20:13 pm )
Testing centres