உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2023ஆம் மற்றும் 2025ஆம் ஆண்டு பருவக்காலத்துக்கான தொடர்களின் இறுதிப் போட்டிகள் லண்டனிலுள்ள தி ஓவல் மற்றும் லோட்ஸ் மைதானங்களில் நடைபெற இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அந்த இரு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர்களையும் இங்கிலாந்தில் நடத்துவதென கடந்த ஜூலையில் பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஐ.சி.சி. ஆண்டு பொதுக் கூட்டத்தின்போது முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவற்றின் இறுதி போட்டிகளுக்கான இடங்கள் இறுதிசெய்யப்பட்டுள்ளன.
இரண்டாவது டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சி கடந்த ஒகஸ்ட் 4 ஆம் திகதி தொடங்கியிருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
தற்போது வரையிலான புள்ளிகள் பட்டியலில் அவுஸ்ரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகள் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன.
இதேவேளை கிரிக்கெட் உலகின் போர் என வர்ணிக்கப்படும் ஆண்கள் ஆஷஸ் டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஆண்டு ஜூன் 16ஆம் திகதி எட்ஜ்பாஸ்டனில் ஆரம்பமாகும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஐந்து டெஸ்டுகளில் கடைசி போட்டி ஜூலை 27ஆம் திகதி ஓவல் மைதானத்தில் இடையில் லோர்ட்ஸ், ஹெடிங்லி மற்றும் ஓல்ட் ட்ராஃபோர்ட் ஆகியவை மூன்று போட்டிகளை நடத்துகின்றன.
இதற்கிடையில் பெண்கள் ஆஷஸ் ஜூன் 22ஆம் திகதி டிரென்ட் பிரிட்ஜில் ஒரு ஐந்து நாள் டெஸ்ட் போட்டியுடன் தொடங்குகிறது.
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி டா
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரி
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம் இ
விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை,
தென் ஆப்பிரிக்கா அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அவுஸ்ரேலிய பகிரங்க
ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடை
திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை
டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று அபு தா
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர
துபாயில் நடந்த ஐ.பி.எல். 2021 தொடரின் இறுதிப்போட்டியில் க
