More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • உரப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரை சந்திக்கும் மட்டு.விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்!
உரப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரை சந்திக்கும் மட்டு.விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்!
Sep 22
உரப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரை சந்திக்கும் மட்டு.விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.



கொழும்பில் இன்று காலை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.



உரப்பற்றாக்குறை காரணமாக நெற்நெய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.



அத்துடன் நெற்செய்கைக்கு தேவையான உரத்தினை அரசாங்கம் வழங்கும் வரையில் நெற்செய்கையில் ஈடுபடப்போவதில்லை எனவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.



இதுதொடர்பில் இதற்கு முன்னரும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்இ இரா.சாணக்கியனை மட்டக்களப்பில் சந்தித்து பேசியிருந்தனர்.



இதன்போது இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியினை சந்தித்து கலந்துரையாடுவது தொடர்பாகவும் பேசப்பட்டிருந்தது. எனினும் ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு சென்றிருந்தமை காரணமாக அவரை சந்தித்து கலந்துரையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



இந்தநிலையில் இன்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் பங்கேற்கவுள்ளனர்.



குறித்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு உர விவகாரத்துடன் தொடர்புள்ள அனைத்து தரப்பினருக்கும் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.



இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக கொழும்பிற்கு அவர்கள் வருகை தந்துள்ள நிலையிலேயே இன்றைய தினம் கொழும்பில் இந்த விடயம் தொடர்பில் இரா.சாணக்கியனை அவர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.



விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என அவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.



குறிப்பாக விவசாய அமைச்சர் தங்களிடம் தெரிவித்த கருத்துக்களில் தங்களுக்கு நம்பிக்கையில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



மழையினை நம்பி ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ஏக்கரிலும் 80 ஆயிரம் ஏக்கர் நீர்பாசனங்களையும் நம்பி தாங்கள் விவசாயத்தில் ஈடுபடுவதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.



இன்று காலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இரா.சாணக்கியனின் பிறந்தநாளினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கேக் ஒன்றினையும் வெட்டியிருந்தனர்.



இதேவேளை இன்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் கலந்துரையாடலிலும் மாலை எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் நடைபெறும் கலந்துரையாடலிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep22

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங

Sep19

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விகாரைகளிலும் எதிர்வர

Apr02

நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கான தீர்வாக அரச

Oct17

அலங்காரங்களை தடை செய்தல் உள்ளிட்ட ஆடம்பரமான  கிறிஸ்

Oct22

தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண

Jan24

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நீடி

Sep23

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆ

Jan25

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உயர் நீதிமன்ற வளாகம்

Mar04

கிளிநொச்சி – வட்டக்கச்சியில் தாய் ஒருவர் தனது மூன்ற

Jan09

குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் மனைவி கோடரியால் த

Jan26

மகளை துஷ்பிரயோகம் செய்து கருக்கலைப்பு செய்த தந்தை அட்

Mar31

ஏப்ரல் 2ஆம் திகதிக்குப் பிறகு மின்வெட்டு நடைமுறைப்படு

Feb18

யாழில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியி

Aug18

புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இ

Jun08

அமைச்சர் நாமல் ராஜபக்‌ச, 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (05:59 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (05:59 am )
Testing centres