கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா சத்துணவில் நச்சுத்தன்மையுடைய அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக தெரிவித்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
திரிபோஷா உற்பத்தி நடவடிக்கையின்போது அஃப்ளொடோக்சின் அடங்கிய சோளம் அகற்றப்படும் என்றும் எனவே குறித்த குற்றச்சாட்டை தாம் நிராகரிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திரிபோஷா தொழிற்சாலையை நவீனமயப்படுத்துவதற்கு இரண்டு மில்லியன் டொலர்களை சுகாதார அமைச்சுக்கு வழங்குவதற்கு தனியார் துறை உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா சத்துணவில் அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார்.
இதனையடுத்துஇ இந்த கருத்து தொடர்பாக சுகாதார அமைச்சு விசாரணை நடத்த வேண்டும் என அரச குடும்ப நல சுகாதார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
அத்தோடு நாடு முழுவதிலும் உள்ள பல குடும்ப நலப் பணியாளர்களிடமும் இது தொடர்பில் வினவியதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் திரிபோஷாவை வழங்க வேண்டாம் என எந்தவொரு தரப்பினரும் தமது அதிகாரிகளிடம் கோரவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள தொழ
க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும்
வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையா
குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிற
திருகோணமலை கடல் பிராந்தியத்தில் சிறு படகுகள் மூலம் மீ
இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவத
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக
லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண
பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை பற்றாக்குறை
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்
இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் த
மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் த
தமிழ் தேசிய இனத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பெருந்தோ
நாட்டை முடக்க வேண்டாம்; நாங்கள் பொறுப்பாக நடந்து கொள்
