சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, அர்ஜென்டினா வீராங்கனை நாதியா பொடரோவ்ஸ்கா தகுதி பெற்றார். காலிறுதியில் கனடாவின் யூஜெனி பவுச்சார்டுடன் (28 வயது, 902வது ரேங்க்) நேற்று மோதிய நாதியா (25 வயது, 298வது ரேங்க்) 1-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். 2வது செட்டில் விளையாடியபோது பவுச்சார்டுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும், தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் பவுச்சார்டு தடுமாற, அதை நன்கு பயன்படுத்தி புள்ளிகளைக் குவித்த நாதியா 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 24 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. யூஜெனி - நாதியா மோதிய காலிறுதி ஆட்டத்தை, முன்னாள் நட்சத்திர வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் நேற்று நேரில் பார்த்து ரசித்தார். 2வது செட்டின்போது கனமழை கொட்டியதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிக
இந்திய பெங்களுரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத
இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வ
பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்ட
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது முதலே
2022 ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளிலிருந்து சிஎஸ்
மோட்டோ ஜிபி பந்தயத்தின் கிரான் பிரீமியோ அனிமோகா பிராண
இந்திய வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி,இந்திய அணியுடனா
இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்
சிட்டா டெல் ட்ரிகோலர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்
இயக்குனர் விக்னேஷ் சிவன் , எம்எஸ் தோனியை வைத்து ஒரு வீட
சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் ப
வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் அவ
ஒலிம்பிக் வரலாற்றில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை க
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல
