எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, எதிர்க் குழுக்களைக் கொண்ட ஒரு பரந்த அரசியல் கூட்டணி இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் டலஸ் அழகப்பெருமவின் சுதந்திர மக்கள் காங்கிரஸ், விமல் வீரவன்சவின் உத்தர லங்கா சபாகய, அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான அணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் 43 வது படையணி மற்றும் ஸ்ரீலங்கா மகாஜன கட்சி ஆகியவற்றுக்கு இடையில் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
மின்சாரக் கட்டண உயர்வுக்கு மத்தியில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் தரப்பு தகவல்
முன்மொழியப்படவுள்ள இந்த கூட்டணி கடந்த காலத்தில் கூட்டணிகளைப் போல ஒரு பிரதான கட்சியைச் சுற்றி அணிதிரள்வதற்கான மரபிலிருந்து விலகிச் செல்ல உள்ளது.
கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை இணைத்தலைவர்கள், தலைமைத்துவ சபை அல்லது அனைத்து குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர் குழுவிற்கு வழங்குவதற்கான முன்மொழிவுகள் கலந்துரையாடல் மட்டத்தில் உள்ளன.
இந்தநிலையில் அடுத்த சில நாட்களுக்குள் அந்த முன்மொழிவுகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட
பிரதேச சபையில் வீதி தொழிலாளர்கள், சாரதிகள், காவலாளிகள
கோட்டாபயவின் பொறிக்குள் விழுந்து விடவேண்டாம் என்றும
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோறளைப்பற்று பிர
கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கி சூட்டு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்ட
கண்டி - முல்கம்பொல, மேம்பாலத்திற்கு அருகில் நேற்று (26) ர
இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர்கள், நாடு நன்றாக இருந்த
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழ
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ர
வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்த
மாத்தறை - பிலதுவ பிரதேசத்தில் நேற்று கிராமத்திற்குள்
கெசினோ வர்த்தகரான தம்மிக்க பெரேராவுக்கு ஸ்ரீலங்கா பொ
இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாட
யாழ்ப்பாணத்தில் பீட்ரூட் அறுவடை செய்யப்படும் நேரத்த