More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ரோஹிங்கியா அகதிகள்!
இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ரோஹிங்கியா அகதிகள்!
Jan 02
இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ரோஹிங்கியா அகதிகள்!

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு அண்மையில் கரைக்கு கொண்டுவரப்பட்ட ரோஹிங்கியா அகதிகளில் ஆதரவற்ற பல சிறுவர்களும் உள்ளடங்குவதாக சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.



இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்,சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் கள மதிப்பீட்டைத் தொடர்ந்து, மியன்மாரில் இருந்து 49 சிறுவர்கள் உட்பட 105 இடம்பெயர்ந்தவர்களை இலங்கை கடற்படை பொறுப்பேற்றது.



இதில் 26 பெண்கள், 30 ஆண்கள் என்று 56 பேரும் உள்ளடங்கியுள்ளனர்.



இந்தநிலையில் குறித்த சிறுவர்களில் 21 ஆதரவற்ற குழந்தைகள் (8 சிறுவர்கள், 13 பெண்கள்) மற்றும் 1 முதியவர் (68 வயது) ஆகியோரும் அடையாளம் காணப்பட்டனர். வந்தவர்களில் மூவரின் (2 சிறுவர்கள், 1 பெண்) உடல்நிலை மோசமடைந்திருந்தமையால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



இடம்பெயர்ந்த மக்களுடன் நிலைமையைப் புரிந்துகொள்வதற்காக தொடர்புகொள்வதில் மொழித் தடை மிகவும் குறிப்பிடத்தக்க தடையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.



தடுப்பு முகாமில் ஆதரவற்ற குழந்தைகள்



கம்பஹா மாவட்டத்தின் வெலிசரவில் உள்ள குடிவரவு தடுப்பு முகாமில் ஆதரவற்ற குழந்தைகள் உட்பட மொத்தம் 22 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



யு.என்.எச்.சி.ஆர் இரண்டு குடியிருப்புகளை வாடகைக்கு விட திட்டமிட்டுள்ளது, இதனையடுத்து பெண்கள் மற்றும் சிறுவர்கள், அவர்களது தற்போதைய இடத்திலிருந்து கூடிய விரைவில் சிறந்த தங்குமிடத்திற்கு மாற்றப்படுவார்கள்.  மீதமுள்ளவர்கள் மிரிஹான தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



மியன்மாரின் ராக்கைனில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை ஏற்றிக்கொண்டு 2022 நவம்பர் 25-27 க்கு இடையில் பல படகுகள் புறப்பட்டதாக கூறப்படுகிறது.



இதில் ஒரு படகே இலங்கை கடற்பரப்பில் நிர்க்கதியான நிலையில் இருந்து மீட்கப்பட்டது. இந்த படகும் மற்றும் ஏனைய படகுகளின் பயண இலக்கு, மலேசியா அல்லது இந்தோனேசியாவாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar18

கொட்டாஞ்சேனை - பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பா

May21

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கா

Feb02

நாட்டில் கடந்த இரண்டு தினங்களில் இடம்பெற்றுள்ள வீதி வ

May28

எதிர்வரும் வாரம் முதல் 5000 ரூபாய் கொடுப்பனவை மீண்டும் வ

Jan22

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கி

Feb02

திருகோணமலை பொது மயானத்தில் பொருத்தப்பட்டிருந்த எரிய

Jun22

கொழும்பு உட்பட 2 மாவட்டங்களின் 2 கிராம சேவகர் பிரிவுகள்

Feb04

நாட்டிற்காக ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவே

Oct21

கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட

Jun09

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உ

Aug17

மன்னார்  முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடு

Sep22

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து

Oct25

பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை ச

Mar12

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட

Mar26

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (17:00 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (17:00 pm )
Testing centres