தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் சென்னைக்கு மக்கள் திரும்பியதால் பஸ் ரெயில் நிலையங்களில கூட்டம் அலைமோதியது.
சென்னை நாடு முழுதும் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. பண்டிகையைக் கொண்டாட சென்னையில் பணிபுரிபவர்கள் மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் என ஏராளமானோர் தங்களின் சொந்த ஊருக்கு சென்றனர்.
இதற்காக வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 4 ஆயிரத்து 218 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்ததால் சென்னையின் முக்கிய பகுதிகள் கடந்த 2 நாட்களாக வெறிச்சொடி காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம், தீபாவளி பண்டிகையைக் கொண்டிய நிலையில் நேற்றுடன் தீபாவளி விடுமுறை முடிந்தது. அதனையொட்டி வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் நேற்று காலை முதல் மீண்டும் பணிக்குச் செல்ல அந்தந்த ஊர்களுக்குத் திரும்பினர்.
அந்த வகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பியதால் பல்வேறு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரெயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் போன்று முக்கிய இடங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சிம்லாவில் இன்று அகில இந்திய அவைத்தலைவர்கள் மாநாட்டை
உத்தரப்பிரதேசத்தில் மனைவியை நண்பனுக்கு பாலியல் வி
இந்தியாவில் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடங
குஜராத் பிரிவை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் அ
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தே
