வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதால் உள்ளுர் விவசயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்த நெல் ஆலை உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுனியா மாவட்ட நெல் ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கையில் கடந்த அறுவடையின் போது விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்த ஆலை உரிமையார்கள் அதனை அரிசியாக்கி விற்பனை செய்ய முற்படும் போது வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதனால் அலை உரிமையாளர்கள் மாத்திரமின்றி விவசாயிகளும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நெல்லை தற்போது அரிசி ஆலை உரிமையார்கள் குறித்த விலைக்கு விற்பனை செய்யமுடியாமையில் அரிசி ஆலைகளில் அரிசி தேங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கால போக செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் நெல் ஆலை உரிமையார்கள் நெல்லை கொள்வனவு செய்வதற்கு முடியாத நிலை ஏற்படும் இது விவசாயிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே அரசாங்கம் உள்ளுர் விவசாயத்தினை மேம்படுத்தவும் உள்ளுர் வர்த்தகர்களை நட்டமடையாது பாதுகாக்கவும் வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதனை தடை செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது தொடர் கடந
சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த ம
முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப
நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்ப
இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுவத
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட
புதிய திட்டத்தின் கீழ் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர
கறுப்பு ஜூலை படுகொலைக் கோவைகளின் கொடிய நினைவுகள் கண்
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளு
இலங்கையில் ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வ
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நா
இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும் என தமிழர் வ
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பி
