நாட்டின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் நான்கு பேர் சரியான ஊட்டச்சத்தான உணவைப் பெறுவதில்லை என்றும் மக்களின் வருமானத்தில் 75% உணவுக்காகவே செலவிடப்படுவதாகவும் தேசிய பேரவையின் துணைக் குழு வெளிப்படுத்தியுள்ளது.
பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய பேரவையின் உப குழு நாடாளுமன்றத்தில் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் கூடியது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் பத்து வருடங்களாக நாட்டில் போசாக்கு குறைபாடு நிலைமை அதிகரித்துள்ள நிலையில் அந்த நிலைமையை களைவதற்கு மேற்கொள்ளக்கூடிய குறுகிய மற்றும் நடுத்தர கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் வருமானம் மற்றும் வீட்டுச் செலவு குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே தற்போதைய நிலைவரத்தை கருத்திற்கொண்டு, பாடசாலைகளுக்கு வரும் மாணவர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாகவும் இதன்போது கூறப்பட்டது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் 300 ஆசிரியர்களைப் பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக பேராசிரியர் வசந்த அத்துகோரல குறித்த குழுவுக்கு விளக்கமளித்துள்ளார்.
வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடிவைத்தகல் கிராமத்திற்க
கிளிநொச்சி கரடி போக்கு சந்தியை அண்மித்த பகுதியில் புத
இலங்கைக்கு இன்றையதினம் (29-05-2022) டீசல் அடங்கிய கப்பல் ஒன்ற
தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை
அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்கிறது என தமிழ்
இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெ
சிறைச்சாலை கட்டளைச்சட்டத்தின் கீழ் சிறைக்கைதிகளின்
மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான சாத்தியம் ம
கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியில் உள்ள வீட்டி
நீதிமன்றங்களிலும் வழக்குக்கோவைகள் குவிந்து கிடக்கின
குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விகாரைய
வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள
மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டி
கடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை பெற
