நாட்டின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் நான்கு பேர் சரியான ஊட்டச்சத்தான உணவைப் பெறுவதில்லை என்றும் மக்களின் வருமானத்தில் 75% உணவுக்காகவே செலவிடப்படுவதாகவும் தேசிய பேரவையின் துணைக் குழு வெளிப்படுத்தியுள்ளது.
பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய பேரவையின் உப குழு நாடாளுமன்றத்தில் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் கூடியது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் பத்து வருடங்களாக நாட்டில் போசாக்கு குறைபாடு நிலைமை அதிகரித்துள்ள நிலையில் அந்த நிலைமையை களைவதற்கு மேற்கொள்ளக்கூடிய குறுகிய மற்றும் நடுத்தர கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் வருமானம் மற்றும் வீட்டுச் செலவு குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே தற்போதைய நிலைவரத்தை கருத்திற்கொண்டு, பாடசாலைகளுக்கு வரும் மாணவர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாகவும் இதன்போது கூறப்பட்டது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் 300 ஆசிரியர்களைப் பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக பேராசிரியர் வசந்த அத்துகோரல குறித்த குழுவுக்கு விளக்கமளித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 3
பொய் சாட்சியத்தை உருவாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்ட
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உ
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிர
வரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட
நுரைச்சோலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப
நாட்டில் மூவரில் ஒருவர் சோம்பேறியாக உள்ளனர் என அடையாள
இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தம
மக்கள் எதிர்கொண்டுள்ள பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப
கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் உறுப்ப
அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நாளை (23) அமைச்சரவையி
2021ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடயைி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதி
அரசாங்கம் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு முரணாக சிங்கர
கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள