எதிர்காலத்தில் மலேசிய வேலைவாய்ப்புக்களுக்கு மலையகத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மலேசிய உயர் ஸ்தானிகர் டடோ டன் யங் தாய் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான அதிவணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர் டடோ டன் யங் தாயை நேற்று அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தனக்கு மிகவும் வருத்தமளிப்பதாகவும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள மறைமுகமாக செயற்பட்ட குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
அதிவணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோவின் வேண்டுகோளின் பேரில் எதிர்வரும் காலங்களில் மலையக இளைஞர்களுக்கு அதிகமான மலேசிய வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை தான் முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமு
கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக
சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்ட பெண் ஒ
மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளின் மேய்ச்சல்தரை
கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூன்று மாதக் குழந்தை உட்பட 13 ப
யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவன
இலங்கைக்கு விஜயம் மேற்க் கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்
இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெ
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் ஆரம்பித்துள்ள
யால வன சரணாலயத்தில் அரியவகை கருஞ்சிறுத்தை ஒன்றை சுற்ற
கம்பளை பொது சுகாதார பரிசோதகர்களினால் மூன்று தடவைகளை PCR
பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வ
மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் ந
யுத்தத்தில் கணவனை யாழ்.நாவலர் வீதியில் பெண் தலமைத்துவ
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உற
