More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • வாடகை தாய்களை அடைத்து வைத்து சிகிச்சை!
வாடகை தாய்களை அடைத்து வைத்து சிகிச்சை!
Oct 17
வாடகை தாய்களை அடைத்து வைத்து சிகிச்சை!

நயன்தாரா வாடகை தாயை அமர்த்தி குழந்தை பெற்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு வாடகை தாய்கள் தொடர்பான விவகாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது.



இந்த நிலையில் சென்னை சூளைமேடு பகுதியில் வீடுகளில் பெண்களை அடைத்து வைத்து வாடகை தாயாக பயன்படுத்துவதாகவும், அவர்களிடம் இருந்து கருமுட்டை தானமாக பெறுவதாகவும்  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



அங்குள்ள பெண்களிடம் இதுபற்றி விசாரித்த போது அவர்கள் சூளைமேடு பகுதியில் உள்ள சி.எப்.சி. மருத்துவமனையின் நோயாளிகள் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரித்த போது பரபரப்பான திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.



சூளைமேடு பகுதியில் மட்டும் பல வீடுகளில் வாடகை தாய்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குஜராத், ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் வங்காளதேஸ் நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்தும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.



சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்களே பெரும்பாலும் வாடகை தாய்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். அனைவரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இதில் பலருக்கு திருமணமே ஆகவில்லை.



குடும்ப வறுமையை பயன்படுத்தி இந்த செயலில் அவர்களை ஈடுபட வைத்துள்ளனர். மேலும் அவர்களுக்கு உணவு கொடுக்காமலும் சித்ரவதை செய்துள்ளனர். அவர்கள் பகலில் வெளியில் வர அனுமதிக்கப்படுவதில்லை.



இரவு நேரத்தில் மட்டுமே வெளியில் வர முடியும். மேலும் டாக்டர்கள் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். சூளைமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.



இதையடுத்து அதிகாரிகள் விஸ்வநாதன், கிருஷ்ணா உள்பட 4 பேரை கொண்ட குழு அமைக்கப்பட்டது. சுகாதாரத்துறையில் உள்ள ஊரக வளர்ச்சி பணிகள் திட்ட முகமையை சேர்ந்த இந்த குழுவினர் நேற்று சூளைமேட்டில் உள்ள சி.எப்.சி. மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சோதனை நடத்தி ஆய்வு மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் அவர்கள் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug21

யூடியூப் சேனலில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விள

Jan21

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள

Apr22

மகாராஸ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்ற

Nov08

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர்

Oct19

நாடு முழுவதும் 

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பாராஸ் என்ற தனியார் ஆஸ்

Apr03

மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணக

Jun16

கொரோனா தொற்றினால் பெற்றோர் 2 பேரையோ அல்லது அவர்களில் ஒ

Apr15

அரசியல், மத கூட்டங்களை நிறுத்தவில்லை என்றால் கொரோனா வ

Apr14

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்ச

Sep24

தமிழகத்தில் காடுகளின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு '

Feb22

 நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால் அதிமுக வெ

Aug19

போலந்து நாட்டில் நடந்த உலக இளையோர் வில்வித்தை சாம்பிய

May22

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் மனிதாபிமான உத

Sep15

உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப்ச

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (06:06 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (06:06 am )
Testing centres