More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சட்டமூல வரைவை இலங்கை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்!
சட்டமூல வரைவை இலங்கை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்!
Oct 17
சட்டமூல வரைவை இலங்கை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

இராணுவத்தால் நடத்தப்படும் 'புனர்வாழ்வு' மையங்களில் மக்களை தடுத்து வைப்பதற்கு அதிகாரிகளுக்கு பரந்தளவிலான அதிகாரங்களை வழங்கும் சட்டமூல வரைவை இலங்கை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.



குறித்த கண்காணிப்பகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தடுத்து வைக்கப்படுபவர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக நேரிடும் என தெரிவித்துள்ளது.



கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டமூல வரைவு, குறித்த புனர்வாழ்வு மையங்களில் போதைக்கு அடிமையானவர்கள், முன்னாள் போராளிகள், வன்முறை, தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் வேறு ஏதேனும் குழுவை சேர்ந்தவர்கள் வலுக் கட்டாயமாக காவலில் வைக்க அனுமதிக்கும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிடுகிறது.



புனர்வாழ்வு பணியக சட்டமூலமானது, 'புனர்வாழ்வு' மையங்கள் இராணுவத்தினரை பணியாளர்களாக கொண்ட? பாதுகாப்பு அமைச்சகத்தால் கட்டுப்படுத்தப்படும் புதிய நிர்வாகக் கட்டமைப்பை நிறுவும்.



ஏற்கனவே முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி மனித உரிமைகள் சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் என்றும் இந்த சட்டமூலமானது புனர்வாழ்வுக்காக அனுப்பப்படுவதற்கான காரணத்தை குறிப்பிடவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



எனினும் எந்தவொரு குற்றத்திலும் தண்டனை பெறாதவர்களை வலுக்கட்டாயமாக 'புனர்வாழ்வு' செய்வதற்கான தன்னிச்சையான அதிகாரங்களை வழங்குவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



'உத்தேச புனர்வாழ்வு பணியக சட்டமானது குற்றஞ்சாட்டப்படாத ஒருவரை தடுப்புக்காவலில் வைப்பதன் புதிய வடிவம் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.



அத்துடன் 'புனர்வாழ்வு சட்டமூலம், சித்திரவதை, தவறான சிகிச்சை மற்றும் முடிவில்லாத காவலில் வைக்கப்படுவதற்கான கதவைத் திறக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



புனர்வாழ்வு சட்டமூலம் என்பது இலங்கையில் தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைகளை அங்கீகரிக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு நெருக்கமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun18

இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டு

Jan31

வவுனியாவில் தொடர் செயின் அறுப்புச் சம்பவங்களில் ஈடுப

Feb02

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட க

Sep23

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர

Sep26

தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார வி

Jan20

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்த

Jan22

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் அவ

Jul18

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்த

Apr02

குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா A மற்றும் B ஆகிய இரண்

Apr21

ரம்புக்கனை பொலிஸ் பகுதிக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த

Apr08

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்து

Jan25

அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலைத் துறைமுக

Jan25

அபூதாபியிலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கிச் சென

Oct20

குத்தகை தவணையை செலுத்த அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை

May27

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வ

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (08:38 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (08:38 am )
Testing centres