More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இந்திய விமானப்படையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இந்திய விமானப்படையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Oct 13
இந்திய விமானப்படையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் மற்றும் தரைப்படை பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் சீன எல்லைக்கு அண்மித்ததாக போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பெண்கள் அதிக அளவில் இயக்கி வருகின்றனர்.



பெண் விமானிகள் மற்றும் தரைப்படை அதிகாரிகள் நாடு முழுவதும் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிப்பாறை செக்டார் முதல் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள விஜயநகரில் உள்ள கிழக்கு திசையில் தரையிறங்கும் தளம் வரை அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் துருப்புக்களிலும் அவர்கள் பணியாற்றி வருவதாகவும் இந்திய விமானப்படையின் கிழக்கு கட்டளை அதிகாரிகள் தெரிவித்தனர்.



ளுச-30 யுஆஐ போர் ஜெட் விமானத்தின் இந்தியாவின் முதல் ஆயுத அமைப்பு இயக்குனர் லெப்டினன்ட் தேஜஸ்வி குறிப்பிடுகையில்இ கண்ணாடி கூரையை உடைத்துஇ நாட்டிற்கு சேவை செய்வதற்கான கனவுகள் நிறைந்த புத்திசாலித்தனமான பெண்கள் உள்ளனர்.



போர் விமானப் படையில் பெண்கள் இருப்பது தனித்துவமான அனுபவம் அல்ல. ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட அனைவரும் சமமாக கடினமாக உழைக்கிறோம்.



பயிற்சி செய்கிறோம். நாங்கள் சமமான நிலையில் இருக்கிறோம். வானத்திலும், தளத்திலும், நாங்கள் அனைவரும் முதன்மையான விமான வீரர்களாக செயற்படுகின்றோம் என்றார்.



அவ்னி சதுர்வேதி மற்றும் பாவ்னா காந்த் உள்ளிட்ட மூன்று பெண்கள் போர் விமானத்தில் பணியமர்த்தப்பட்டதன் மூலமாக இந்திய விமானப்படை முதல் முறையாக போர் விமானத்தில் பெண்களை அனுமதித்தது.



பின்னர் மிக்-21 விமானத்தில் முதன்முதலில் காந்த் தனியாகப் பறந்தார். ஷிவாங்கி சிங் பின்னர் ரஃபேல் விமானங்களில் விமானியாகினார்.



யுடுசு துருவ் மார்க்-3 விமானிகளான  லெப்டினன்ட் அனி அவஸ்தி மற்றும் ஏ நைன் ஆகியோர் அருணாச்சல பிரதேசத்தின் அடர்ந்த காடுகள் மற்றும் உயரமான பகுதிகளுக்கு அருகில் தொடர்ந்து பறக்கின்றனர்.



இந்த விமானிகள் சிறப்பாக செயற்படுகின்றனர். எங்களைப் பொறுத்தவரை அவர்கள் பெண்கள் என்பதை விடவும் முதலில் விமானப் போர்வீரர்கள், அவர்கள் ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்ய இயந்திரங்களை நன்றாகக் கையாள வேண்டும் அதனை செவ்வனே செய்கின்றார்கள் என்று கிழக்குக் கட்டளை அதிகாரி ஒருவர் கூறினார்.



இந்திய விமானப்படையில் தரை மற்றும் விமானப் பணிகளில் 1300 இற்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகள் பணிபுரிகின்றனர். படைகளில் 'ஸ்ரீ சக்தி'யை மேலும் மேம்படுத்துவதற்கான அரசாங்கக் கொள்கை மற்றும் அக்னிவீர் திட்டத்தில் பெண்களை விமானப்படையினராகத் தூண்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar15

தமிழகத்தில் 187 தொகுதிகளில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலி

Jul19

மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான

Jul05

உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் முஸ்லிம் ராஷ்ட்ர

Jul29

குஜராத் பிரிவை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் அ

May26

காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்

Sep28

ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள

Aug08

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலம் மற்றும் ஈரோடு மாவ

Jun26

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்க

Oct10

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் தங்பாவா பகு

Jul14

சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுள

Jun23

ஜார்க்கண்ட் மாநிலம் செத்மா சுகாதார துணை மையத்தில் ஒப்

Feb04

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கை

Jun21

உலகம் முழுவதும் இன்று 7-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப

Jun06

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அ

Aug16

சென்னை சத்தியமுர்த்தி பவனில் உள்ள 150 அடி உயர கோடி கம்பத

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (19:01 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (19:01 pm )
Testing centres