ஜனாதிபதியாக வருவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு கிடைத்தது என்பது இரகசியமல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் நிபுணர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய அரசியல் கட்சிப் பிரிவினைகள் இன்றி ஜனரஞ்சகமாக செயற்பட எதிர்பார்க்கும் பின்னணியில்இ தேசிய பேரவை மற்றும் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுக்களில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் பங்கேற்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர் 'நாடாளுமன்றத்திற்குள் கட்சி அமைப்பிலிருந்து குழுக்கள் உருவாகியுள்ளன.
ஆளுங்கட்சியின் ஆதரவுடன் நான் ஜனாதிபதியானேன் என்பது இரகசியமல்ல. ஒரு சிறுபான்மையினர் மற்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்கச் சென்றனர். எனக்கு ஆளுங்கட்சியின் ஆதரவு கிடைத்தது. மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எனக்கு வாக்களித்தனர்.
எங்களுடைய குறுகிய கட்சி வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை நான் செய்துகாட்ட விரும்புகிறேன். அதன்படி செயற்படுங்கள்.
தற்போதுஇ கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க நாடாளுமன்றத்தில் தேசிய பேரவை நிறுவப்பட்டது. நாடாளுமன்றத்தில் ஏனைய சபைகளும் நிறுவப்பட்டுள்ளன.
ஆனால் இன்னும் இவற்றை நிரப்ப முடியவில்லை. சிலர் தேசிய பேரவையில் இணைகின்றனர். மற்றவர்கள் வருவதில்லை. அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் நான்கு பேர் சரியா
கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்
கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பாக ரணில் தெரிவித்த கருத
யாழ். மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியிலும் ஜூன் மாத ஆர
திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்
நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் ரூபாய்க்கு மே
ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகி
யாழ்ப்பாணத்தில் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி நலன்ப
தமிழக மீனவர்களின் அட்டூழியங்களை கண்டித்து யாழில் மீன
யாழ்ப்பாணம் நிலாவரை கிணறுக்கு அருகாமையில் தொல்பொருள
வவுனியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்கள
நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களி
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 ப
பொலன்னறுவையில் இன்று காலை சாரதியின் கவனயீனத்தால் பேர
இலங்கைக்கு மேலும் கடன் வழங்குவதைத் தவிர்ப்பது குறித்
