More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தேசிய பேரவையின் தலைவராக சம்பிக்க ரணவக்க நியமனம்
தேசிய பேரவையின் தலைவராக சம்பிக்க ரணவக்க நியமனம்
Oct 08
தேசிய பேரவையின் தலைவராக சம்பிக்க ரணவக்க நியமனம்

பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய பேரவையின் உப குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.



மேற்படி உபகுழுவின் முதலாவது கூட்டம்  நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.



தலைவர் பதவிக்கு பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பெயர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவினால் முன்மொழியப்பட்டது. அதனை நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் நசீர் அஹமட் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.



தேயிலை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்தல், பால் உற்பத்தியை அதிகரித்தல், விவசாயத்தை மறுசீரமைத்தல், உர உற்பத்தி, சுற்றுலாத் தொழில் போன்ற நாட்டின் எதிர்காலப் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழுவின் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.



பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்களுடன் கலந்துரையாடி ஒவ்வொரு துறை தொடர்பான பொருளாதார அபிவிருத்தி முன்மொழிவுகளை உள்ளடக்கிய அறிக்கையை 20ஆம் திகதி தேசிய பேரவைக்கு சமர்ப்பிக்கவும் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.



இதன்படி, அந்நியச் செலாவணி விவகாரங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான நிபுணர்களையும் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளையும் எதிர்வரும் 13ஆம் திகதி குழுவின் முன் அழைத்து கருத்துக்களைப் பெறுவதற்கு உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.



மேலும் உணவு, சுகாதாரம், போக்குவரத்து, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரும் 14ம் திகதி அழைத்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்கும் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.



பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய போரவை உபகுழுவின் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் 19ஆம் திகதி நடத்துவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.



அமைச்சர் நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர்களான சிசிர ஜயக்கொடி மற்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, எம்.ராமேஸ்வரம், மனோ கணேசன், ஏ.எல்.எம்.அதாஉல்லா, ரவூப் ஹக்கீம் மற்றும் நாடாளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி ஜயதிலக ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



தேசிய பேரவையின் மற்றொரு உப குழுவான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct15

கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மற

Feb02

கலேவல-வீரகலவத்த பகுதியில் காதலித்த யுவதியை பார்க்கச்

Feb11

சுகாதாரப் பணிப்புறக்கணிப்பின் போது அங்கொட மனநல வைத்த

Mar10

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக

Jul19

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைசர் கொவிட்-19 தடுப்பூச

Sep22

புகையிரத திணைக்களத்தில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ந

Mar03

நாட்டுக்கும் மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்க

May02

நான்கு மாவட்டங்களில், காவல்துறை அதிகார பிரிவு ஒன்றும்

Mar19

மக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டால் பண்டிகை

Feb06

லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைய

Mar18

அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண

Mar18

அங்குருவாதொட்ட - படகொட சந்தியில் நேற்று (17) இரவு இரு குழ

Aug19

கொவிட்-19 தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை என பிரதி சு

Sep30

நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊ

Apr25

திருகோணமலை – குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் ஆண் ஒ

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (18:23 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (18:23 pm )
Testing centres