நாவலப்பிட்டி ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் வீடு ஒன்றிலிருந்து 12 ரக துப்பாக்கி மற்றும் வெற்றுத்தோட்டாக்கள், வேட்டையாடப்பட்ட மானின் தோல் ஆகியவற்றுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபரிடமிருந்து அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த 12 ரக துப்பாக்கி ஒன்றும், வெற்றுத்தோட்டா க்களும் மானின் தோலும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேக நபரை நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கியை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை சந்தேக நபர் மேற்படி துப்பாக்கியை எங்கிருந்து எடுத்து வந்தார்? என்ற கேள்விக்கு பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்களுக்காக ந
களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விடயத்தில் எழ
நேற்றைய தினத்தில் (27) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்ட
இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ
இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம காவல்துறை பிரிவுக்குட
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தின
காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினைய
கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் சுமார் 10 மில்லி
வல்வெட்டித்துறையில் இன்று மேலும் 40 பேருக்கு தொற்று உள
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் ச
இலங்கையில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த யானை ஒன்று தனது 69
நேற்றைய தினம் (16) கொழும்பு நகரம் உட்பட இலங்கையின் ஏழு மு
பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் கொவிட்-19 நோயாளர
அம்பாறை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து காவல்த்த