ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா விலகியுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக பும்ராவுக்கு முதுகுப் பகுதி எலும்பில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்த 6 மாதங்களுக்கு அவரால் களம் காண முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பும்ராவிற்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து மருத்துவக் குழு மற்றும் நிபுணர்களுடன் நடைபெற்ற விரிவான மதிப்பீடு மற்றும் ஆலோசனைக்கு பின்னர் அவருக்கு ஓய்வளிக்கபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கூறியுள்ளது.
இதற்கு அறுவைச் சிகிச்சை ஏதும் தேவை இல்லை எனவும் தொடர்ந்து ஓய்வில் இருக்கும் பட்சத்தில் அந்தக் காயம் தானாகவே குணமடைந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பும்ரா விலகியது இந்திய அணிக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்பட்டாலும் அவருக்கு பதில் அணியில் இடம் பெற உள்ள வேகப்பந்து வீச்சாளர் பெயரை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலதிக வீரர்களாக உள்ள தீபக் சஹார், முகமது ஷமி மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோரில் ஒருவர் பிரதான அணியில் இணைத்துக் கொள்ளப்படுவர்.
உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடர
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர புதுப்பிக
இந்திய டெஸ்ட் அணியில் 10 ஆண்டுகளுக்கு பின் புதிய நிகழ்வ
ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. ய
2022 ஐபிஎல் தொடரில் மீண்டும் கோப்பை வெல்வதற்கான ஆயத்த பண
ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ப
ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல டென்னிஸ் வீர
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையி
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றின் 17ஆவது போட்
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது ஆட்டத்தி
வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் அவ
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி டா
ஐபிஎல் சீசன் 15 வது சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. ம
சிட்டா டெல் ட்ரிகோலர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கோபன்ஹே
