யாழ். வலிகாமம் வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவியின் வீடியோ உரையாடலைப் பதிவு செய்து அதை வைத்து மிரட்டி அவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஏழாலையைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயது இளைஞர்கள் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவியுடன் இளைஞர் ஒருவர் வீடியோ அழைப்பின் மூலம் சில மாதங்களுக்கு முன்னர் உரையாடியுள்ளார்.
இதன்போது அந்த உரையாடலைப் பதிவு செய்துள்ளார்.
மாணவியுடனான உரையாடல் பதிவை தனது உறவினரான இன்னொரு இளைஞருக்கும் குறித்த இளைஞர் அனுப்பியுள்ளார்.
அவ்வாறு தனது நண்பனின் மூலம் கிடைத்த அந்த வீடியோ பதிவை ஏனையோருக்கும் அனுப்ப உள்ளதாக மிரட்டி மாணவியை அந்த இளைஞர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
அதேவேளை இந்த வீடியோ பதிவு பல இடங்களிலும் பகிரப்பட்டுள்ளது.
மாணவி கல்வி கற்கும் பாடசாலைச் சமூகத்துக்கு இந்த விடயம் தெரியவந்ததைத் தொடர்ந்து ஆசிரியர்களால் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் ஊடாக பொலிஸ் நிலையத்துக்கு இது குறித்து தகவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து வீடியோ பதிவு செய்த இளைஞரும் அதனைப் பயன்படுத்தி மாணவியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அ
நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்த
குருணாகலில் காட்டு யானையின் தாக்குதலுக்கு புதுமண தம்
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் பொருளாதார நெருக்கட
நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்கு மும்கொடுத்துள்ள ந
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி
தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க இல
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்
உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியலில் இலங்கை
சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி, நடத்த
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஜப்பானில் போ
அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பத
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங
உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின்
