சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இன்று குறித்த சடலம் கடற்படையினரின் உதவியுடன் சாய்ந்தமருது பொலிஸார் மீட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த சடலமானது அடையாளம் காணப்படாதிருந்த நிலையில் இன்று காலை பொதுமக்களின் உதவியினை பொலிஸார் கோரியிருந்தனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலம் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து குறித்த பெண் காரைதீவு பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஆறுமுகம் வனிதா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் ஓர் ஆசிரியர் எனவும் இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட வுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளின் மேய்ச்சல்தரை
சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின
காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான க
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிர
அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் ச
அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமு
கட்டவிழ்த்து விடப்பட்ட அழிவிற்கு ராஜபக்சர்களே முழுப
இலங்கையின் சமகால நிலவரங்களின் அடிப்படையில் ராஜபக்சர
எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மான
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் 24 மணிநேர மின்வெட்டு அ
நாட்டில் தற்போது ஆங்காங்கே மக்கள் ஆர்ப்பாட்டங்களை செ
2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படைய
