More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நிதிகளை விழுங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுக்கள்!...
நிதிகளை விழுங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுக்கள்!...
Oct 02
நிதிகளை விழுங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுக்கள்!...

அரசாங்கங்கள், கடந்த எட்டு வருடங்களில் பத்து விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களுக்காக(PCoI), 504 மில்லியன் நிதியை ஒதுக்கியதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.



இதில் 2020 ஆம் ஆண்டில் மிகப் பெரிய தொகையான 120 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.



பொதுவாக இந்த குழுக்களின் கண்டறிவுகள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பயனுள்ள முடிவுகளை தந்ததா என்பதை அளவிட முடியவில்லை.



2015, மார்ச் 3 (03.03.2015) மற்றும் இந்த ஆண்டு ஜூன் 30ஆம் (30.06.2022) திகதிக்கு இடையில், சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கான பணம் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுக்கு இடையில் ஐந்து சிறப்பு ஆணைக்குழுக்களை நியமித்தார். இதற்காக அவரது பதவிக்காலத்தில் 337 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.



இவை அரசியல் பாதிப்புகளை விசாரணை செய்தல், எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்ட தவறுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்தல், முந்தைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழியை மதிப்பிடுவதற்கான விசாரணைகளை மேற்கொள்ளல், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களை விசாரணை செய்தல் மற்றும் இலங்கை சுங்கத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளல் ஆகியவற்றுக்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களாகும்.



2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளுக்கு இடையில், நல்லாட்சி அரசாங்கத்தின் முதல் மூன்று வருடங்களில், ஐந்து ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு, அவற்றுக்கு 254 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.



பாரிய மோசடி, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம், அரச வளங்கள் மற்றும் சலுகைகள் (PRECIFAC) தொடர்பான விசாரணைகள், திறைசேரி பத்திரங்களை வழங்குதல் தொடர்பான விசாரணை, ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை, அவரது சொந்த அரசாங்கத்தின் மோசடி மற்றும் ஊழல் விசாரணை, மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை என்பவற்றுக்காக இந்த ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct21

22ஆவது திருத்தத்துக்கு குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆதர

Jan21

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத

May03

உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது ம

Feb02

சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசால

Aug17

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், திவுல

Mar11

நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்ப

Feb01

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23ஆம் திகதி

May11

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளி

May21

தமிழ்நாட்டின் திருச்சியில் சிறையில் இருக்கம் தாயகப்

Mar16

கடந்த காலத்தில் டீசல் பயன்பாடு 54%, பெட்ரோல் பயன்பாடு 35% ம

Jul24

நாட்டில் நேற்று(23) வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்த

Feb02

தனியார் பஸ் ஊழியர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்தத்

Sep29

Aflatoxin  அடங்கியுள்ள திரிபோஷா அழிக்கப்பட்டுள்ளதனால், 

Oct22

இந்த வருடத்தின் கடந்த 8 மாத காலப்பகுதியில் சிறுவர் துன

Jan28

புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (21:40 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (21:40 pm )
Testing centres