அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க ஆளும்கட்சியின் சில உறுப்பினர்கள் தயாராவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை வந்தவுடன் இந்த கோரிக்கையை உடனடியாக விடுக்கவுள்ள தாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாகக் இந்த கோரிக்கையை முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ரராச்சி ஆகியோர் ஜனாதிபதியிடம் விடுத்திருந்தனர்.
அத்துடன் மக்களின் நெல் கொள்வனவுக்கான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறை படுத்தவும் விமலவீர திஸாநாயக்க உட்பட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை காலவரையறையின்றி பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் வர்த்தக மாபியாவை முறியடிக்கவும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று தயாராகியுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்படவுள்ள ம
வைத்தியர் கயான் தந்த நாராயணனின் மரணத்தின் மூலம் கொரோன
ஒண்லைன் வகுப்புக்கள் மாணவர்களிற்கு பல்வேறு தாக்கங்க
மேல் மாகாணத்தில் புகை பரிசோதனையில் தோல்வியடைந்த பல வா
கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நான்கு வான் கதவுகள் தி
அமைச்சர் நாமல் ராஜபக்ச, 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம
யாழ்ப்பாணம் - கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத
