கொழும்பு மாவட்டத்தில் பல இடங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரம் தொடர்பான விசேட அறிக்கையாளர் Clement Voule கவலை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கையை பொதுக் கூட்டங்களுக்குத் தடையாக முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களின் உரிமைகளை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் இலங்கை நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், கொழும்பு – உயர் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு, இலங்கை இராணுவம் தலைமையகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்புப் படைகள் மற்றும் முப்படைத் தளபதிகளின் தலைமையகம் மற்றும் கொழும்பு மாவட்டத்தின் பல இடங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள வளாகங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தமக்கு த
நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ம
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தா
மிரிஹான - ஜூபிலி கனுவ சந்திப் பகுதியில் அமைந்துள்ள கோட
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் வி
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமு
இரண்டாவது கொரோனா தொ்றறாளர் மரணம் நேற்று பதிவாகியுள்ள
சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று
துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி
இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட
நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற
