காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கிய பதாகை காட்சிக்காக வைக்கப்படுகின்றது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொழும்பு காலி முகத்திடலில், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டக் களத்தில் இலங்கையில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் புகைப்படங்கள் தாங்கிய பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன.
எனினும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த பதாதைகள் அகற்றப்பட்டிருந்தன.
இறந்த ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இவ்வாறான பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன. அவை அகற்றப்பட்ட பின்னர் இன்று மீண்டும் அந்த பதாதைகளை அங்கு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் புகைப்படத்தை தாங்கிய பதாதையும் அங்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி திட்டம
காலி முகத்துவாரப் பகுதியில் 70 இலட்சம் ரூபா பெறுமதிய
ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்
பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்
இலங்கையின் அறிவார்ந்த தலைமுறை நாட்டை விட்டு வெளியேறி
தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை ம
அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்களிடமோ அ
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது
இலங்கையில் இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்த
புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்
யாழ் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம்
கொழும்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பெண் ஒருவர் மாட
பிற உதவிகளுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்
யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மே
குருணாகல் மாவட்டத்தின் குலியாப்பிட்டிய காவல்துறை அத
