தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு வருடத்திற்கு சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிறுவனமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் அண்மையில் அறிவித்திருந்தார்.
அதன்படி தாய்லாந்தின் சியாம் கேஸ் என்ற நிறுவனமே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்த அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த இரு ஆண்டுகளில் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நிறுவனமானது மெட்ரிக் தொன் ஒன்றுக்கு அறவிட்ட தொகையை விட 9 டொலர் குறைவாக புதிய நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற முடியும்.
கடந்த 2 ஆண்டுகளாக, ஓமானில் இருந்து நாட்டுக்கு எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. எனினும், குறித்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.
இதற்கமைய அடுத்த மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்காக விலைமனு கோரப்பட்டிருந்ததாக அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.புதிய நிறுவனத்திடமிருந்து 9 டொலர் குறைவாக எரிவாயுவை பெற முடியும் என்பதால் நாட்டில் எரிவாயு விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக
அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பத
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்க
நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து த
இலங்கையில் மேலும் இரு வாரங்களுக்கு முழுநேரப் பயணக் கட
உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சமூக வலைத்
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது சற்று செயலற்ற நிலையில்
இஞ்சியில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் காணப்படுகிறது. இ
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அ
அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் அமைச்சர் நாமலின் கரு
வடக்கு, கிழக்கில் எந்தவொரு பகுதியையும் தமிழ் மக்களின்
கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தி
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி
