கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் நடந்த வான்வழிப் போரின் போது உக்ரைனின் MiG-29 போர் விமானம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டதாக ரஷ்ய இராணுவம் கூறியுள்ளது.
ஒரு செய்தியாளர் சந்திப்பில், ரஷ்யாவின் இராணுவ செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ், தமது படையினர் இரண்டு Tochka-U ஏவுகணைகளையும், ஒரு Smerch ஏவுகணையையும் அழித்ததாகக் கூறினார்.

அத்துடன் பத்து உக்ரைனிய ட்ரோன்களும் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் உக்ரைனில் உள்ள ஆயுதக் கிடங்குகள் மற்றும் கட்டளைச் சாவடிகள் உட்பட 38 இராணுவ இலக்குகளையும் ரஷ்யப் படைகள் தாக்கியதாக அவர் கூறினார்.
இதேவேளை பரந்த தொழிற்துறை வளாகத்தில் இருந்து உக்ரைனிய குடிமக்களை வெற்றிகரமாக வெளியேற்றியதைத் தொடர்ந்து, மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலை மீதான தாக்குதலை ரஷ்யா மீண்டும் ஆரம்பித்துள்ளது.
பொதுமக்கள் வெளியேற்றும் நடவடிக்கைக்காக கடந்த இரண்டு நாட்களாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது
இந்தநிலையில் இன்றைய பொழுதில் இறுதி குடிமகன் ஆலையை விட்டு வெளியேறியவுடன், ரஷ்யா தமது தாக்குதலை ஆரம்பித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஆலைக்குள் மேலும் பொதுமக்கள் காயமடைந்த படையினருடன் தங்கிருப்பதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.

ஒருவராலும் யாராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுத திறன்
உக்ரைன் கடற்கடையில் நேட்டோ உறுப்பினர் நாடான எஸ்டோன
ரஷ்ய உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில்
சீனாவில், உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரோன் வைரஸ் பரவல
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில்
உலகின் மிகப்பெரிய ஏவுகணை சோதனை என உலக நாடுகளை நம்ப வைத
உக்ரைன் எல்லையில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட படைகளை ரஷ
இலங்கையில் நேற்று இடம்பெற்ற வன்முறையை குறித்து ஐக்கி
குரங்கம்மை அதிகமாகப் பரவினால், அது குறிப்பிடத்தக்க தா
"மனித உரிமைகள் மீதும், மனிதநேயத்தின் மீதும் தாக்குதல
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரின் பார் மற்றும் உணவகங
2019ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த ஷேல் கேஸ் (களிப்பா
துனிசியாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்ற புலம்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் அந்நாட்டில் சிக்க
இரண்டு மாதங்களில் முதல் முறையாக இங்கிலாந்து மற்றும் வ
