கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் நடந்த வான்வழிப் போரின் போது உக்ரைனின் MiG-29 போர் விமானம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டதாக ரஷ்ய இராணுவம் கூறியுள்ளது.
ஒரு செய்தியாளர் சந்திப்பில், ரஷ்யாவின் இராணுவ செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ், தமது படையினர் இரண்டு Tochka-U ஏவுகணைகளையும், ஒரு Smerch ஏவுகணையையும் அழித்ததாகக் கூறினார்.

அத்துடன் பத்து உக்ரைனிய ட்ரோன்களும் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் உக்ரைனில் உள்ள ஆயுதக் கிடங்குகள் மற்றும் கட்டளைச் சாவடிகள் உட்பட 38 இராணுவ இலக்குகளையும் ரஷ்யப் படைகள் தாக்கியதாக அவர் கூறினார்.
இதேவேளை பரந்த தொழிற்துறை வளாகத்தில் இருந்து உக்ரைனிய குடிமக்களை வெற்றிகரமாக வெளியேற்றியதைத் தொடர்ந்து, மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலை மீதான தாக்குதலை ரஷ்யா மீண்டும் ஆரம்பித்துள்ளது.
பொதுமக்கள் வெளியேற்றும் நடவடிக்கைக்காக கடந்த இரண்டு நாட்களாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது
இந்தநிலையில் இன்றைய பொழுதில் இறுதி குடிமகன் ஆலையை விட்டு வெளியேறியவுடன், ரஷ்யா தமது தாக்குதலை ஆரம்பித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஆலைக்குள் மேலும் பொதுமக்கள் காயமடைந்த படையினருடன் தங்கிருப்பதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத
பிரேசில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்ட
ரஷ்யாவின் அதிபர் பதவியில் இருந்து விளாடிமிர் புட்ட
ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க ஜேர்மனி 2,000 கூடுதல் டாங்கி
ஜனவரி 8ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்பட
கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிர
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக, சீனா தனியாக
உலகம் முழுவதும்
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் தனது வளர்ப்பு ப சீனாவின் வுகான் நகரில் 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிப சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா உக்ரைனில் ரஷ்ய படைப்பிரிவின் தளபதி ஒருவர் தனது சொந்த உஸ்பெகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந்உள்ளூர் விலங்கியல் பூங்காவில் ஒரு சிறுத்த
