More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கண்ணீர்புகை வாகனம் மற்றும் பொல்லுகளுடன் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்! காலிமுகத்திடல் பகுதியில் பதற்றம்
கண்ணீர்புகை வாகனம் மற்றும் பொல்லுகளுடன் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்! காலிமுகத்திடல் பகுதியில் பதற்றம்
May 02
கண்ணீர்புகை வாகனம் மற்றும் பொல்லுகளுடன் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்! காலிமுகத்திடல் பகுதியில் பதற்றம்

காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 



இந்த நிலையில் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. 





கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளும் வாகனங்களுடன் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்ட நிலையில், இதுவரையில் அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டு வந்த மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.



இதனை தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன், எங்களை சுடுவதற்காகவா இங்கு வந்தீர்கள், முடியுமானால் எங்களை சுட்டுத்தள்ளுங்கள் என தமது பலத்த எதிர்ப்பினை காட்டி பொலிஸாரை அங்கிருந்து அனுப்பும் முயற்சியில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர். 





அத்துடன் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும் பொலிஸார் பலர் பாதுகாப்பு கடமைக்காக வந்துள்ளதுடன், தற்போது போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.



23 நாட்களாக ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலானது போராட்டக்காரர்களின் முற்றுகைக்குள் இருக்கின்றது.



இந்த நிலையில் பொலிஸாரின் இந்த திடீர் செயற்பாடுகள் அப்பகுதியில் போராட்டக்காரர்கள் மத்தியில் குழப்ப நிலையையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. 



ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயில் பகுதியில் போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்டுள்ள மேடையை அகற்றுமாறே பொலிஸார் போராட்டக்காரர்களிடம் கோரியுள்ளதாக தெரியவருகிறது. 



இதேவேளை பொலிஸார் அங்கு பொல்லுகள், தடிகளுடன் களமிறங்கியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்ததுடன், கண்ணீர்ப்புகை வாகனம் மற்றும் ஒரு தரப்பு பொலிஸார் போராட்டக்காரர்களின் எதிர்ப்பினால் அங்கிருந்து சென்றுள்ள நிலையில், மற்றுமொரு தொகுதியினர் அப்பகுதியிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 





மேலும், அரசாங்கத்தை பதவி விலகக் கோரி காலிமுகத்திடலில் 23ஆவது நாளாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Gallery Gallery Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan27

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடாகவே தமி

Jan12

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவசரம

Jan22

மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸா

Feb27

இலங்கையில் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களைத் தகனம

Jun12

யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மிருசுவில் அமைந்தி

Mar24

மின் வெட்டு வேளையில் அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம

Sep23

தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல எண்ணிக்கையிலான ப

Aug29

பருத்தித்துறை, மந்திகை ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் ப

Oct17

வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலை

Jun04

 

டீசல் தட்டுப்பாடு காரணமாக திங்கட்கிழமை (6) முதல்

Mar13

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், கொள்வனவு

Sep21

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதி

Jan30

இலங்கைக்குள் தற்போது 500000 சீனர்கள் இருக்கின்றனர்.அவர்க

Jan25

இலங்கையில் மூன்றாவது முறையாக முடக்கம்  செய்வதற்கு எ

Apr01

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசே

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 02 (10:42 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 02 (10:42 am )
Testing centres