பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை சுமார் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
விசேடமாக கடல் வழியாக இவ்வாறு தப்பி செல்வது இலகுவாக இடம்பெறுவதனால் பல கடல் எல்லைகளில் கடற்படையினர் நீண்ட காலமாக பாதுகாப்பினை தீவிரப்படுத்தியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை விமானப்படையும் இந்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக விமானப்படை பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்வோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அண்மைக் காலத்தில் வட மாகாணத்தை சேர்ந்த சுமார் 200 பேர் இவ்வாறு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் செல்ல முயன்ற பலர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு தப்பிச் செல்ல பல்வேறு மீன்பிடி படகுகளை சிலர் பயன்படுத்தியுள்ளதாகவும் இதன் காரணமாக குறித்த படகுகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் விசேட தேடுதல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ம
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வெஸ்ட் ரேட
மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத் தடைகளை மீறிச் செயற்ப
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இ
அவப்பெயருடனும் அழிவுடனும் கோட்டாபய அரசு நிறைவுக்கு வ
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் எதிர்காலத்தில்
சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்ச
சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழ
நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருட கடூழிய சிறை
எத்தனோல் விலை உயர்வால் எதிர்வரும் நாட்களில் மதுபானத்
இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு
மிரிஹான பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் இயங்கி வந
அளுத்கம பகுதியில் கடலில் நீராடச் சென்ற சிறுவன் நீரில்