பாகிஸ்தானின் 23-வது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். பிரதமராக பதவியேற்ற ஷபாஸ் ஷெரீப், அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், நாங்கள் இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறோம். ஆனால் காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு இல்லாமல் அது நடக்காது என தெரிவித்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானி புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஷபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாகிஸ்தானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷபாஸ் ஷெரீப் அவர்களுக்கு வாழ்த்துகள்.
மேலும், பயங்கரவாதம் இல்லாத பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை இந்தியா விரும்புகிறது. இதன்மூலம் நமது வளர்ச்சி, சவால்களில் கவனம் செலுத்தி, நமது மக்களின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதிசெய்ய முடியும் என பதிவிட்டுள்ளார்.
ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதமானது, தரையில் இருந
தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 2 மண்டலங்களாக பிரிக்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பேரவைகளுக்கான
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த
துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி இன்று தொடங்கியது. அடு
வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடு
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பர கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப் கட்சி மாறுவதற்காக வேறொரு கட்சி தலைவரை ஒரு முறையாவது ந டெல்லி: குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையில் கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அ சட்டமன்ற தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்த
