டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்கு ரூ.5,500 மானியம் வழங்கப்படும் என்றும் அதில் முதல் 1000 பேருக்கு ரூ.2000 கூடுதல் மானியம் வழங்கப்படும என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லட் கூறியதாவது:-
டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்கு தலா ரூ. 5,500 மானியமாக வழங்கப்படும். இதில், முதல் ஆயிரம் பேருக்கு ரூ.2000 கூடுதலாக வழங்கப்படும்.
வர்த்தக பயன்பாட்டிற்கான கனரக சரக்கு இ- சைக்கிள்கள் மற்றும் மின் வண்டிகள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும். கார்கோ இ- சைக்கிள்களுக்கான மானியம் முதல் 5 ஆயிரம் பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். இந்த மானியம் முன்பு இ- கார்ட்களை தனிப்பட்ட முறையில் வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்டது.
இது தற்போது, இந்த வாகனங்களை வாங்கும் நிறுவனம் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.30 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
மேலும், நகர சாலைகளில் தற்போது 45,900 இ- வாகனங்கள் இயங்கி வருகிறது. இதில் 36 சதவீதம் இருசக்கர வாகனங்கள். டெல்லியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் இ- வாகனங்களின் சதவீதம் 12 சதவீதமாக தாண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதி பாராளுமன்ற தொகுதியில் வரும் 17-ம் தேதி இடைத்த
தேனி மாவட்டம் போடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்
சேலம் உ
உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற
மும்பை மலாடு, மத்ஐலேன்ட் பகுதியில் உள்ள சொகுசு பங்களா
தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ
திருப்பதி ஏழுமலையானுக்கு 5.3 கிலோ எடை கொண்ட தங்கக்
சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலை
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுத
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந்
முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தன்னை நேரில் சந்தித்துப்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் த
இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது த
