டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்கு ரூ.5,500 மானியம் வழங்கப்படும் என்றும் அதில் முதல் 1000 பேருக்கு ரூ.2000 கூடுதல் மானியம் வழங்கப்படும என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லட் கூறியதாவது:-
டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்கு தலா ரூ. 5,500 மானியமாக வழங்கப்படும். இதில், முதல் ஆயிரம் பேருக்கு ரூ.2000 கூடுதலாக வழங்கப்படும்.
வர்த்தக பயன்பாட்டிற்கான கனரக சரக்கு இ- சைக்கிள்கள் மற்றும் மின் வண்டிகள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும். கார்கோ இ- சைக்கிள்களுக்கான மானியம் முதல் 5 ஆயிரம் பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். இந்த மானியம் முன்பு இ- கார்ட்களை தனிப்பட்ட முறையில் வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்டது.
இது தற்போது, இந்த வாகனங்களை வாங்கும் நிறுவனம் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.30 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
மேலும், நகர சாலைகளில் தற்போது 45,900 இ- வாகனங்கள் இயங்கி வருகிறது. இதில் 36 சதவீதம் இருசக்கர வாகனங்கள். டெல்லியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் இ- வாகனங்களின் சதவீதம் 12 சதவீதமாக தாண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால
பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நலத்திட்டங்களை தொடங்கி
முதல்-அமைச்சர்
சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கை காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை ந மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா வ மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந திமுக தலைவராக தேர்வான மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிர்வாக மும்பையில் பொது இடங்களில் மக்களுக்கு கட்டாய கொரோனா பர ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறி பாய திருச்ச தமிழகத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில தமிழ்நாடு பா.ஜ.க.மாநில துணைத் தலைவராக இருந்த அண்ணாமலைய