சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா அமெரிக்கா இடையிலான விரிவான மற்றும் உலகளாவிய கூட்டமைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லியாட் ஆஸ்டின் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் ஆகியோருடன் இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் வெளிவிவகார மந்திரி எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் ஏப்ரல் 11 ஆம் தேதி வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுதந்திரமான, வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்த பேச்சுவார்த்தை உறுதிப்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இரு நாட்டு உறவுகள், தொழில்நுட்பம், கல்வி மற்றும் பொதுச் சுகாதாரம் ஆகியவற்றை இந்த பேச்சுவார்த்தை மேலும் மேம்படுத்தும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையேயான 2+2 பேச்சுவார்த்தை கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் வாஷிங்டன் செல்ல உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு செல்லும் இருவரும், அங்கு நடைபெறும் இந்தியா-ஜப்பான் இடையே அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையிலும் பங்கேற்கின்றனர்.
கார்கிவை பாதுகாக்கும் உக்ரேனிய துருப்புக்கள் ரஷ்யா எ
சீன தலைநகர் பெய்ஜிங்கில் திடீரென்று கடந்த சில நாட்களு
அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபத
பெல்ஜியத்தில் உயிரியல் பூங்காவில் இருக்கும் மனித குர
ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்
கம்போடியாவில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க 7 வயதான ஆப
இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக
கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிர
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா ஓராண்டுக்
மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகருமான
அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ்.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
பெண்களுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டுமென தாலிபான்க
நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ தன்னிடம் தகாத
