சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா அமெரிக்கா இடையிலான விரிவான மற்றும் உலகளாவிய கூட்டமைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லியாட் ஆஸ்டின் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் ஆகியோருடன் இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் வெளிவிவகார மந்திரி எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் ஏப்ரல் 11 ஆம் தேதி வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுதந்திரமான, வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்த பேச்சுவார்த்தை உறுதிப்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இரு நாட்டு உறவுகள், தொழில்நுட்பம், கல்வி மற்றும் பொதுச் சுகாதாரம் ஆகியவற்றை இந்த பேச்சுவார்த்தை மேலும் மேம்படுத்தும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையேயான 2+2 பேச்சுவார்த்தை கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் வாஷிங்டன் செல்ல உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு செல்லும் இருவரும், அங்கு நடைபெறும் இந்தியா-ஜப்பான் இடையே அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையிலும் பங்கேற்கின்றனர்.
நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய
உக்ரைனின் டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப
பெல்ஜியத்தில் உயிரியல் பூங்காவில் இருக்கும் மனித குர
சிங்கப்பூரில் இருக்கும் ஒரு மசாஜ் பார்லர் நடத்துனருக
ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கக்கூடாது, வேலைக்கு செல
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட இணைய
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைர
ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கு
சகாராவில் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி
ஆப்பானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், ஆட்ச
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் இன்று காலை மர்ம நபர் திடீ
நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.<
