இலங்கையின் மூத்த கல்வியியல் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தமது 78வது வயதில் காலமானதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு அவர் காலி - பலப்பிட்டிய என்ற இடத்தில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்தபோதே மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அவரின் உடலம் தற்போது பலப்பிட்டிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
1944 டிசம்பர் மாதம் பிறந்த பேராசிரியர் சந்திரசேகரம், இலங்கையின் தமிழ் கல்வி வரலாற்றில் பாரிய பங்களிப்புக்களை செய்தவராவார். பதுளையை பிறப்பிடமாகக்கொண்ட பேராசிரியர் சோ. சந்திரசேகரம், கல்வியியல் துறையில் பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் ஹிரோசிமா பல்கலைக்கழக முதுமானி பட்டதாரியாவார்.
கொழும்பு பல்கலைக்கழக கல்வியியல் துறை முன்னாள் பீடாதிபதியாகவும், தேசிய கல்வி ஆணைக்குழுவின் முன்னாள் அங்கத்தவராகவும் மற்றும் கொழும்பு தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் பணியாற்றினார்.
பேராசிரியர் சோ.சந்திரசேகரம், தமிழ், ஆங்கில, சிங்கள மொழிகளில் புலமை கொண்டவர் என்பதுடன் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
மேலும் மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற கொள்கையை முதன் முதலில் முன்மொழிந்தவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரம், ஆவார்.
கிழக்கு முனையை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பாக பல்வ
நிலக்கரியை ஏற்றிய சரக்கு கப்பல் ஒன்று இலங்கையை வந்தடை
நேற்றைய தினத்தில் (10) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
இலங்கையிலுள்ள ஒவ்வொரு ஐந்து குடும்பங்களில் நான்கு கு
இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உதவுமாறு
கறுப்பு ஜூலை படுகொலைக் கோவைகளின் கொடிய நினைவுகள் கண்
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சொத்துக்களில் பெ
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று 2 மணித்தி
இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் அரசாங்கத்த
நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதிய
கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு
கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூன்று மாதக் குழந்தை உட்பட 13 ப
உலக வங்கியின் நிதி அனுசரனையில் அமுல்படுத்தப்பட்டு வர
13வது போர் வெற்றியாண்டு நிகழ்வு அரச தலைவர் கோட்டாபய ராஜ
வடக்கு, கிழக்கில் எந்தவொரு பகுதியையும் தமிழ் மக்களின்