நாட்டில் அவசர கால நிலமையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
எனினும், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும், வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்டம், தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை ஆறு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சனிக்கிழமை மாலை 06 மணியிலிருந்து திங்கட்கிழமை காலை 06 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்திருந்தது.
காலையில் இடம்பெற வேண்டிய ரயில் சேவைகள் மற்றும் தூர இடங்களில் இருந்து இடம்பெறவேண்டிய பஸ் சேவைகள் இடம்பெறவில்லை. இதனால், அதிகாலையில் பயணங்களை மேற்கொள்ள வேண்டியவர்கள் கடுமையான சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர்.
பிரதான நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் காலைவேளையில் திறக்கப்படவில்லை. சில பஸ் நிலையங்களில் பயணிக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறியமுடிகின்றது.
அமைதி, பொது மற்றும் தனியார் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் வீட்டில் மரணமான சிறுமிய
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந
அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 750 மில்ல
மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளின் மேய்ச்சல்தரை
புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி
இலங்கை மத்திய வங்கி பெருந்தொகை பிணை முறிகளை விற்பனை ச
அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண
உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்
கண்டி பகுதியில் ஒரு நாய்க்கு பிறந்த பச்சை நிறக்குட்டி
23 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வக
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற
மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடுக
எந்த வித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உ
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் நீதிம
