வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மதுபானசாலையில் ஊரடங்கு வேளையில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (03-04-2022) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, மதுபானசாலை மூடியதன் பின்னர் மதுபானசாலைக்கு முன்னால் மூவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதன்போது ஒருவர் தனது மோட்டார் சைக்கிலில் வைத்திருந்த மரம் அறுக்கும் வாள் மூலம் மற்றைய இருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு அவ்விடத்திற்கு செல்ல முற்பட்டபோது, மற்றைய இருவரும் இணைந்து அவரின் வாளை பறித்து, அவர் மீது வாள் மற்றும் கற்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த நபர் அங்கிருந்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று தஞ்சமடைந்த நிலையில், இருவரும் அவ்விடத்திற்கு வாள்களுடன் வெளியேறி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான ந
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண
வடக்கு மாகாண ஆளுநராக புதிதாக பதவியேற்றுள்ள ஜீவன் தியா
சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின் போது உயிரிழந்த மாணவ
கொழும்பில் சேர் பாரோல் ஜயதிலக மாவத்தை பகுதியில் ஆர்ப்
வடக்கு மாகாணத்தில் புதிதாக 15பேருக்கு கொரோனா வைரஸ் தொற
வணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்
ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்
இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்த
வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் 6 பேர் உட்
பொரளை சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவற
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 750 மில்ல
கொடிய போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் மு
மேல் மாகாணத்தில் விஷேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக
மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை பிரிவிலுள்ள மரப்பா
