ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த செல்ல முயற்சித்த போது, பொலிஸார் தடைகளை ஏற்படுத்தி அவர்களை தடுத்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாச உட்பட எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுதந்திரத்தின் தந்தையான டி.எஸ்.சேனாாநாயக்கவிடம் மக்களின் குறைகளை எடுத்து கூற அனுமதி வழங்குமாறு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பொலிஸாரிடம் கூறினர்.
இதில் சம்பிக்க ரணவக்க. ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், கபீர் ஹாசிம், மனுஷ நாணயக்கார, எஸ்.எம். மரிக்கார் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசார்ட் பதியூதீன், முஜிபுர் ரஹ்மான் உட்பட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
சுதந்திர போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு செல்ல பொலிஸார் அனுமதி மறுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன் மக்களின் எதிர்ப்பு கண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அச்சம் கொண்டுள்ளதால், அதனை தடுக்க முயற்சித்து வருவதாகவும் ஆண்டவனே வந்தாலும் மக்களின் எழுச்சியை தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோட்டா கோ ஹோம் என்றும் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
நுவரெலியா- உடபுஸ்ஸலாவ,டெல்மார் கீழ் பிரிவில் ஏற்பட்ட
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி வ
எனது கணவரான ரிஷாட் பதியுதீன் 20 வருடகாலமாக நாடாளுமன்ற உ
சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரக
நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு ச
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட
இலங்கையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின்
மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் மன்னா
தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்
பனாமுற பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூலஎடியாவல பிரதேசத்த
கொரோனா சிகிச்சை நிலையங்களில் பணியாற்றும் உள்ளுராட்ச
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒ
இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொது
