விக்டோரியா மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கங்களில் இருந்து முறைகேடாக நீர் வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீர் மின் உற்பத்தி நிலையங்களான விக்டோரியா மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கங்களில் இருந்து மின் உற்பத்தி இயந்திரங்களுக்குள் செலுத்தப்படாத நிலையில் சுமார் இரண்டு மணிநேரம் நீர் வெளியேற்றப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.
நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதாயின் அதற்கான செயலகத்தின் அனுமதி முன்கூட்டியே பெறப்பட வேண்டும் என்பது விதியாகும்.
ஆனால் கடந்த நாட்களில் நீர்த்தேக்கத்தில் இருந்து நீர்வெளியேற்றப்பட்டபோது அவ்வாறான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என்று தெரவிக்கப்படுகின்றது.

மின்சார உற்பத்தியில் தடங்கல் ஏற்படுத்தும் வகையில் குழப்பவாதிகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
அதன் அடிப்படையில் தற்போது இரண்டு பொலிஸ் குழுக்கள் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நீர்த்தேக்கங்களை பார்வையிட்டு அதன் பின்னர் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள்
கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் கருவாடு வகைகளின் வி
நிவாரணம் அடிப்படையில் வழங்குவதற்கு சதொச நிறுவனத்துக
கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துர
நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரத
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில், கரம்பக
இலங்கையில் இருந்து இதுவரை நிதி உதவிகள் தொடர்பில் கோரி
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்க
முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந
எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும்
