எரிவாயுவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் ஏற்ற இறக்கமான எரிவாயு விலை மற்றும் டொலரை கருத்தில் கொண்டு விலை சூத்திரமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலை உயர்வினால் ஏற்பட்ட நட்டத்தை நாட்டு மக்கள் அனைவரும் செலுத்த வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படுவதால், எரிவாயு விலையில் ஏற்படும் மாற்றங்களை அந்த நுகர்வோர் மட்டுமே ஏற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படாமையால், கடந்த 8ஆம் திகதி இலங்கை வந்திறங்கிய கப்பலில் நேற்றும் எரிவாயுவை இறக்க முடியவில்லை.
இதனால், சமையல் எரிவாயு சிலிண்டர்களை இன்று சந்தைக்கு வெளியிடப்போவதில்லை என லிட்ரோ தெரிவித்துள்ளது.
எரிபொருளுக்காக பொது மக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிற்றோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் மக்கள் வரிசைகளில் காத்திருக்கின்றனர். கடந்த நாட்களில் எரிவாயு கிடைக்காமையினால் போராட்டங்களில் மக்கள் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார
இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித
சிலாபம் தும்மலசூரிய யகம்வெல பிரதேசத்தில் உள்ள பள்ளிவ
தேசத்தின் உண்மையான சுதந்திரத்திற்கான முன்வரு வோம் என
நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை
புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே
இராணுவத்தினரால் நடத்தப்படும் 94 தனிமைப்படுத்தல் நிலைய
உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்
நேற்றைய தினத்தில் (06) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
ஓட்டுமொத்த தோட்டத்தொழிலாளர் சமூகத்தை இலக்காகக் கொண்
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன
மன்னார் மாவட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அற
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்ம
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டு நாணய மாற்று விகி