நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் செல்வந்தர்கள் பெருமளவு நெல்லை கொள்வனவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நாட்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என பரவி வரும் வதந்திகள் காரணமாக இவ்வாறு நெல் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
திஸ்ஸமஹாராம, ஹம்பாந்தோட்டை, கதிர்காமம் மற்றும் புத்தள போன்ற பிரதேசங்களில் இவ்வாறு கூடுதல் தொகைக்கு நெல் கொள்வனவு செய்யப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் நெல் 165 ரூபா என்ற அடிப்படையில் கொள்வனவு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக கொழும்பைச் சேர்ந்த செல்வந்தர்கள் இவ்வாறு கொள்வனவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பயறு, கௌபி போன்ற தானியங்களின் விலைகளும் பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும் அவற்றையும் செல்வந்தர்கள் களஞ்சியப்படுத்த தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திஸ்ஸமஹாரம, ஹம்பாந்தோட்டை போன்ற பகுதிகளின் கிராமங்களில் செல்வந்தர்கள் சஞ்சரிப்பதனை காண முடியும் எனவும், அவர்கள் இவ்வாறு கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்க
நாட்டில் நாளை (திங்கட்கிழமை) 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள
அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அ
|
இலங்கையில் வாக Mar11
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதிக் கோரிக்கை கடித Sep26
மட்டக்களப்பில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உட Mar03
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் தீ Sep20
நாட்டில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கில Apr30
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற Mar22
மொரட்டுவை - கொரலவெல்ல பகுதியில் மின்னியலாளர் (electrician) ஒரு Jan19
வவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை Mar13
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீத Feb08
எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்ப Oct22
தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண Aug18
நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்ப தமிழ் சினிமாசிறப்பானவை
![]() Sri Lanka
World
|