அலரிமாளிகைக்கு அருகில் மற்றும் காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்த போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேக நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரைக் கைது செய்வதற்கு பல குழுக்களைக் கொண்ட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பல குழுக்கள் அனுப்பட்டபோதும், சி.ஐ.டி.யினரால் இதுவரை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவரைக் கண்டுபிடிக்க பல காவல்துறை குழுக்கள் தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட நால்வரின் பெயரை சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதன் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மஹிந்த கஹந்தகமவை ஜூன் 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மின்சாரத்துறை பாரிய நெருக்கடியை நோக்கிச் செல்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சாம்பல்தீவு, நாயாறு, ந
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின
இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்
இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் ந
அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்
நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாய
ஐக்கிய மக்கள் சக்தியால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்ப
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண
இராணுவத்தை நோக்கி தாம் சுடவில்லை எனவும், தம்மை நோக்கி
வைத்தியர் கயான் தந்த நாராயணனின் மரணத்தின் மூலம் கொரோன
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு முதுகு பகுதியில் ஏற்பட்
வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு ஆத
வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் ம
யாழ்ப்பாணம் பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரைப்பகு
