அலரிமாளிகைக்கு அருகில் மற்றும் காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்த போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேக நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரைக் கைது செய்வதற்கு பல குழுக்களைக் கொண்ட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பல குழுக்கள் அனுப்பட்டபோதும், சி.ஐ.டி.யினரால் இதுவரை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவரைக் கண்டுபிடிக்க பல காவல்துறை குழுக்கள் தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட நால்வரின் பெயரை சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதன் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மஹிந்த கஹந்தகமவை ஜூன் 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அ
அமைச்சர் உதய கம்மன்பில நம்பிக்கையில்லா பிரேரணையை எதி
ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொ
நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சிறிகொ
வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
யாழ்ப்பாணத்தில் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி நலன்ப சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் த இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக அரசியலமைப்பின் உத்தேச 22 வது திருத்தம் தொடர்பாக நாடாளு பொதுமக்களின் பிரச்சினைக்கு இந்த அரசிடம் தீர்வு ஏதுமி நாட்டில் மூவரில் ஒருவர் சோம்பேறியாக உள்ளனர் என அடையாள உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத் ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக் நாட்டில் நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி க
