லிட்ரோ நிறுவன எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
லாஃப் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை நேற்றைய தினம் அதிகரிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 6,850 ரூபாவாகவும், 5 கிலோகிராம் 2,740 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லிட்ரோ நிறுவனமும் எரிவாயு விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே லிட்ரோ நிறுவனம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும், 12.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் எடையுள்ள வீட்டு சமையல் பாவனைக்கான எரிவாயு நாளை மறுதினம் வரை விநியோகிக்கப்பட மாட்டாது என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கையில் போதிய கையிருப்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், எரிவாயு கொண்டு வரும் சரக்குக் கப்பல் விரைவில் நாட்டிற்கு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுக் கழகத்திற்கு வந்த ஒருவரின் கடன் அட்டையைப
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் ப
இரணைதீவிற்கு மக்கள் சென்று வருவதில் காணப்படுகின்ற கெ
கறுப்பு ஜூலை படுகொலைக் கோவைகளின் கொடிய நினைவுகள் கண்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்று
வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று (05) இடம்
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீ
இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.02 லட்சம் எ
அரசாங்கம் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு முரணாக சிங்கர
தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 வயதுடைய பா
இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலை
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரி
கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துர
டீசல் தட்டுப்பாடு காரணமாக திங்கட்கிழமை (6) முதல்
வவுனியா நகரில் கனகரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோத
