கொலன்ன பகுதியில் கொள்ளையிடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்திய மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் இரண்டு இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவத்தில் இருந்து தப்பி வந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொலன்ன புதிய நகரில் வசித்து வரும் இரண்டு இளைஞர்களுக்கு சொந்தமான சுமார் 7 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன என கொலன்ன காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் வெலிமடை, கெப்பட்டிபொல மற்றும் திஸ்ஸமஹாராம லுணுகம்வெஹெர பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக எம்பிலிப்பிட்டிய பணாமுர, மொனராகலை நக்கல மற்றும் அரலங்கவில பகுதிகளை சேர்ந்த சந்தே நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் இரண்டு பேர் இராணுவத்தில் கடமையாற்றி வருவதுடன் விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளனர். மற்றைய சந்தேக நபர் இராணுவத்தில் கடமையாற்றிய நிலையில் தப்பியோடியவர் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் கொலன்ன காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடு
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித
நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையில
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் ப
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்க
இலங்கை இளைஞர், யுவதிளுக்கு கனடா உட்பட பல வெளிநாடுகளில
மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கைகளை ம
மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை
இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணி
இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்கும
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்
கடன் திட்ட அடிப்படையில் பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்ல
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றத்