வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடுத்து, வடக்கில் உள்ள தீவு சார்ந்த கடற்றொழிலாளர்களுக்கு சுமார் 15,000 லீற்றர் மண்ணெண்ணெய்யை வழங்க இந்தியா முன்வந்துள்ளது.
இந்தியாவின் ‘அக்ஷயபாத்ரா’ மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் வடமாகாண மக்களைச் சென்றடைவதன் ஒரு பகுதியாக, அனலைதீவு மற்றும் எழுவைத்தீவு ஆகிய வடக்குத் தீவுகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர் கூட்டமைப்புகள் இந்திய மானியத்தைப் பெறுகின்றன.

இதன்படி, ஒவ்வொரு கடற்றொழிலாளருக்கும் 20 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துாதரக அதிகாரி ராகேஷ் நட்ராஜ் ஆகியோர் நேற்று ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தனர்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அண்மைய எரிபொருள் விலையேற்றம் காரணமாக, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மண்ணெண்ணெய்யை வழங்குமாறு யாழ்ப்பாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பு சங்கம், தூதரகம் ஊடாக இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதனையடுத்தே இந்திய உதவி வழங்கப்பட்டுகிறது.

மும்பை பாலிவுட்டில் நடிகை கெஹானா வசிஸ்த் ஆபாச ப
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் அ
வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் பயனர்களின் தனியுரிம
கடத்தல், பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்படும் சாமிய
எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செ
முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்க
உலகில் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் எந்தவொரு பிரதிபல
வாக்களிக்காதவர்கள் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய்
சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்
மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் ப
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாத
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நில
சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவ
தருமபுரி நகரில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட
சென்னை மெரினாவில் நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்
