More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • விளாடிமிர் புடினின் அடுத்த கொடூர நகர்வு இதுதான்: சிரியா மருத்துவர் திகில் எச்சரிக்கை
விளாடிமிர் புடினின் அடுத்த கொடூர நகர்வு இதுதான்: சிரியா மருத்துவர் திகில் எச்சரிக்கை
May 27
விளாடிமிர் புடினின் அடுத்த கொடூர நகர்வு இதுதான்: சிரியா மருத்துவர் திகில் எச்சரிக்கை

உக்ரைனில் இதுவரை கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ள ரஷ்ய துருப்புகள், அடுத்து பேரல் வெடிகுண்டுகளை வீசலாம் எனவும், பேரல் குண்டுகள் மனித உடல்களை சிதறடிக்கும் எனவும் சிரியா மருத்துவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



குறித்த விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய உளவுத்துறையும் உறுதி செய்துள்ளது. அதில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்காக 50க்கும் மேற்பட்ட 'பேரல் வெடிகுண்டு நிபுணர்கள்' ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஐரோப்பிய உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.



பேரல் குண்டுகள் பொதுவாக எண்ணெய் பீப்பாய்கள், எரிவாயு உருளைகள் உள்ளிட்டவையில் வெடிபொருளை நிரப்பி, அதில் குளோரின் உட்பட பாதிப்பை அதிகரிக்கும் பொருட்கள் கலந்து தயாரிப்பார்கள்.



விளாடிமிர் புடினின் அடுத்த கொடூர நகர்வு இதுதான்: சிரியா மருத்துவர் திகில் எச்சரிக்கை



 



குறித்த மலிவான குண்டுகளை ஹெலிகொப்டர்களில் இருந்து வீச முடியும். 2012ல் இதுபோன்ற பேரல் குண்டுவீச்சில் சுமார் 11,000 அப்பாவி சிரிய மக்கள் கொல்லப்பட்டனர்.



குறித்த தாக்குதலில் இருந்து தப்பிய சிரியா மருத்துவர் ஒருவர் தற்போது உக்ரைன் மக்களை எச்சரித்துள்ளார். விளாடிமிர் புடினை பேரல் குண்டு ஜனாதிபதி என அடையாளப்படுத்தியுள்ள அந்த மருத்துவர், விளாடிமிர் புடினுக்கு பெண்கள், சிறார்கள், பொதுமக்கள், இராணுவத்தினர் என எந்த பாகுபாடும் இல்லை எனவும், அவருக்கு மரணத்தின் கோர முகம் எனவும் சாடியுள்ளார்.



விளாடிமிர் புடினின் அடுத்த கொடூர நகர்வு இதுதான்: சிரியா மருத்துவர் திகில் எச்சரிக்கை



 



சிரியா நகரங்களில் முன்னெடுத்த கொடூரங்களை அவர் தற்போது உக்ரைன் நகரங்களில் செய்துவருவதாக குறிப்பிட்ட மருத்துவர், உண்மையில் அவமானகரமானது என குறிப்பிட்டுள்ளார்.



சிரியாவின் அலெப்போ நகரில் ஒரே மாதத்தில் மட்டும் 83 பேரல் குண்டுகள் வீசப்பட்டதாகவும் நூற்றுக்கணக்கான மக்கள் அதில் கொல்லப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



விளாடிமிர் புடினின் அடுத்த கொடூர நகர்வு இதுதான்: சிரியா மருத்துவர் திகில் எச்சரிக்கை



 



ரஷ்யாவின் ஆலோசனைகளின் அடிப்படையில் சிரியா இராணுவம் பேரல் குண்டுகளையே அதிகமாக பொதுமக்கள் மீது பயன்படுத்தியுள்ளது. தற்போது அதே சூழலை உக்ரைன் நகரங்களும் எதிர்கொள்ள இருக்கிறது என்கிறார் அந்த மருத்துவர்.



பேரல் குண்டுகள் மலிவான ஆயுதம் மட்டுமின்றி, அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்கிறார் அவர். மனித உடல்கள் சிதைந்து சின்னாபின்னமாகும் எனவும், உயிர் தப்பினாலும் அடையாளம் தெரியாமல் போய்விடும் என பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளார் அந்த மருத்துவர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep26

அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த ‘பியோனா’ ப

Feb25

உக்ரைனில் தந்தை ஒருவர் தனது மகளைக் கட்டிக்கொண்டு கதறி

Jan19

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடி

May27

உக்ரைனில் இதுவரை கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ள ரஷ்ய

Apr26

ஓட்டோமான் பேரரசு என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒர

Aug28

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய

Mar13

பாப்பரசர் பிரான்சிஸ் போரை உடனடியாக நிறுத்துமாறு மீண்

Mar29

எதிரிகளான ரஷ்யப் படையினர் மீண்டும் ஒன்று சேர்ந்து வரு

Sep20

ஜப்பானை தடம் புரட்டிய சக்தி வாய்ந்த புயலால் குறைந்தது

Aug24

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் கடந்த 14-ம் தேதி கால

Jul13

இங்கிலாந்து இந்தியாவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளிய

Mar15

மேற்கத்திய நாடுகளை குறிவைத்து தாக்குதல் முன்னெடுக்க

Mar31

31.3.2022

12.35: உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கு

Mar22

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்குர் ரோகி என்ற

Jun04

உக்ரைனில் நடந்த சண்டையின் போது பிரான்ஸ் நாட்டவர் ஒருவ

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (22:53 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (22:53 pm )
Testing centres